districts

img

எம்.பி.,க்கள் இடைநீக்கத்தை கண்டித்து விடுதலை சிறுத்தைகள் கட்சி போராட்டம்

தஞ்சாவூர்/அரியலூர், டிச.20-  நாடாளுமன்றத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் உள்ளிட்ட 80 எம்.பிக்களின் இடைநீக்கத்தை கண்டித்தும், ஒன்றிய மோடி அரசு உடனடியாக பதவி விலக வேண் டும் என வலியுறுத்தியும் விடு தலைச் சிறுத்தைகள் கட்சியினர் புதன்கிழமை போராட்டத்தில் ஈடு பட்டனர். தஞ்சை மாவட்டம் பட்டுக் கோட்டை ரயில் நிலையத்தில் விடு தலை சிறுத்தைகள் கட்சியினர், பட்டுக்கோட்டைக்கு வந்த காரைக் குடி - மயிலாடுதுறை பயணிகள் ரயிலை திடீரென மறித்து போராட் டத்தில் ஈடுபட்டனர். சம்பவ இடத் திலிருந்த பட்டுக்கோட்டை காவல் துறை துணை கண்காணிப்பாளர் பிருதிவிராஜ்சௌகான் தலைமை யிலான காவல்துறையினர், மறியல் போராட்டம் நடத்திய விடு தலை சிறுத்தைகள் கட்சியினரை கைது செய்தனர். ரயில் மறியல் போராட்டத் திற்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி  தஞ்சை தெற்கு மாவட்டச் செய லாளர் அரவிந்த் குமார் தலைமை வகித்தார். மாவட்ட செய்தி தொடர் பாளர் வெற்றிச்செல்வன் மற்றும் ஒன்றியச் செயலாளர்கள் கலந்து கொண்டனர்.  அரியலூர் அரியலூர் மாவட்டம் ஜெயங் கொண்டம் நான்கு ரோட்டில், விசிக கிழக்கு மாவட்டச் செயலாளர் கதிர் வளவன் தலைமையில் மறியலில் ஈடுபட முயன்றனர். மறியலில் ஈடுபட  முயன்றவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தியதை தொ டர்ந்து, ஜெயங்கொண்டம் நான்கு  ரோட்டில் அமைந்துள்ள தலைமை  தபால் அலுவலகம் முன்பு ஆர்ப் பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் மாநில துணைச் செயலாளர் செல்வ ராஜ் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.