districts

ஜூன் 29 உப்பிலியப்பன் கோயில் குடமுழுக்கு விழா

கும்பகோணம், ஜூன் 25-

    தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே ‘தென்னகத்  திருப்பதி’ என்று அழைக்கப்படும் உப்பிலியப்பன் வெங்கடா ஜலபதி சுவாமி கோயில் அமைந்துள்ளது.

    இக்கோவிலின் குடமுழுக்கு விழா 14 வருடங்களுக்குப் பிறகு ஜூன் 29 அன்று நடைபெறுகிறது. இவ்விழாவில் பங்கேற்க பக்தர்கள் ஏராளமானோர் வருவர் என எதிர்பார்க்கப் படுகிறது. இதற்காக, திருவிடைமருதூர் உட்கோட்ட காவல் துறையினர் மற்றும் கோயில் நிர்வாகத்தினர் சிறப்பு பாது காப்பு ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.

    குடமுழுக்கு பாதுகாப்பு குறித்து திருவிடைமருதூர் காவல் துறை கண்காணிப்பாளர் ஜாபர் சித்திக் செய்தியாளர் களிடம் கூறுகையில், “ஜூன் 29 அன்று நடைபெறுகிற குட முழுக்கு விழாவின் பாதுகாப்பு பணிகளுக்கு உள்ளூர் போலீ சார், சிறப்பு பிரிவு போலீசார், ஊர்க்காவல் படையினர் தீயணைப்புத் துறையினர் என 200-க்கும் மேற்பட்ட போலீ சார் நியமிக்கப்பட்டுள்ளனர். கோயிலின் முக்கிய பகுதிகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. இதனை கண்காணிக்கும் பணியில் போலீசார் 24 மணி நேரமும்  ஈடுபடுவர். பக்தர்கள் சிரமமின்றி கோவிலுக்குள் செல்ல சிறப்பு வழிகள் உருவாக்கப்பட்டுள்ளன.

    இதனைத் தவிர வெளியூரிலிருந்து வருபவர்கள் வாக னங்களை நிறுத்துவதற்கும் இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. கோயிலுக்கு உள்ளே-வெளியே என நான்கு இடத்தில், தற்கா லிக அவசர மருத்துவச் சிகிச்சை பிரிவு ஏற்படுத்தப்பட்டு உள்ளது” என்றார்.

    குடமுழுக்கு விழாவிற்கு வர முடியாதவர்கள் நிகழ்ச்சியை  https://www.youtube.com/live/GJz-VjxPeu0? feature=share என்ற யூடியூப் வலைதளத்தில் நேரலையாக  காணவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.