districts

திருச்சி முக்கிய செய்திகள்

ஜன.14-அரியலூரில் விளையாட்டுப் போட்டிகள்

அரியலூர், ஜன.11- முன்னாள் முதல்வர் கருணாநிதி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, அரியலூர் மாவட்ட விளையாட்டு அரங்கில், ஜனவரி 14 ஆம் தேதி நடைபெறும் கீழ்க்கண்ட விளை யாட்டுப் போட்டிகளில் பள்ளி, கல்லூரி மாணவர்கள் பங்கேற் கலாம் என்று ஆட்சியர் ஜா.ஆனிமேரி ஸ்வர்ணா தெரி வித்துள்ளார். இதுகுறித்து அவர் தெரிவித்தது: முன்னாள் முதல்வர் கருணாநிதி பிறந்த நாளை முன்னிட்டு,  அரியலூர் மாவட்ட பள்ளி, கல்லூரிகளில் பயிலும் மாணவ மாணவியர்கள் மற்றும் இளைஞர்களுக்கான கபடி, கையுந்துபந்து மற்றும் கால்பந்து விளையாட்டுப் போட்டிகள் 14.1.2024 அன்று காலை 9 மணி முதல் அரியலூர் மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் நடத்தப்படஉள்ளது. ஆண்கள் மற்றும் பெண்களுக்கு தனித் தனியே இந்தப் போட்டிகள் நடத்தப்பட உள்ளது.            இப்போட்டிகளில்  17 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் கலந்துகொள்ளலாம். போட்டிகளில் கலந்து கொள் பவர்கள் வயது சான்றிதழ் மற்றும் ஆதார் கார்டு நகல் ஆகியவற்றை கண்டிப்பாக சமர்ப்பிக்க வேண்டும்.        இது தொடர்பான மேலும் விவரங்களுக்கு அரியலூர் மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் ந.லெனின் கைப்பேசி 7401703499 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

மாற்றுத்திறன் மகளிருக்கு அரசுப் பள்ளியில் வேலைவாய்ப்பு  

திருச்சிராப்பள்ளி, ஜன,11- திருச்சி, பார்வைத்திறன் குறைபாடுடைய மகளிருக் கான அரசுமேல்நிலைப் பள்ளியில் காலியாக உள்ள 1 முது கலைபாட ஆசிரியர், 4 பட்டதாரி ஆசிரியர் மற்றும் 2 இடை நிலை ஆசிரியர் ஆகிய பணியிடங்களை மதிப்பூதிய அடிப் படையில் முழுமையான கல்வித்தகுதி பெற்ற நபர்களை கொண்டுநிரப்பிக் கொள்ள பள்ளியின் மூலம் விண்ணப் பங்கள் சேகரிக்கப்பட உள்ளது.   பெறப்படும் விண்ணப்பங்களில் தகுதியுடைய நபர்களை திருச்சி, மாவட்ட ஆட்சிய ரின் தலைமையிலான தேர்வுக்குழுவின் மூலம் தேர்வு செய்யப்பட்டு அதன் பின் நேர்முகத்தேர்வின் அடிப்படை யில் கீழ்க்காணும் அட்டவணையில் கண்டுள்ளவாறு பதவிகள் நியமனம் செய்யப்பட்டு (முற்றிலும் தற்காலிக மான) ஊதியம் நிர்ணயம் செய்யப்படவுள்ளது. முதுகலை ஆசிரியர் பொருளியல் கல்வித்தகுதி B.Ed.,/ Senior Diploma in Teaching for VI or B.Ed.,(Special B.Ed.,(Special Education) மதிப்பூதியம் ரூ18,000ம்,  பட்டதாரிஆசிரியர் ஆங்கிலம்-1, கணிதம்-1, அறிவி யல்-1, சமூகஅறிவியல் - 1 கல்வித்தகுதி B.Ed.,/ Senior Diploma in Teaching for VI or B.Ed.,(Special Education) மதிப்பூதியம் ரூ.15,000ம், இடைநிலைஆசிரியர் கல்வித் தகுதி D.T.Ed., Junior Diploma in Teaching for VI or B.Ed., (Special Education)  மதிப்பூதியம் ரூ.12,000-ம்  ஆகவே, திருச்சி மாவட்டத்தை சார்ந்த தகுதிவாய்ந்த நபர்கள் விண்ணப்பங்களை, பார்வைத்திறன் குறைபாடு டைய மகளிருக்கான அரசுமேல்நிலைப்பள்ளி, புத்தூர், திருச்சி-17ல் 31.1.2024ஆம் தேதிக்குள் நேரடியாகவோ அல்லது தபால் மூலமாகவோ ஒப்படைத்து பின்னர் நடைபெறும் நேர்முத் தேர்வின் மூலம் பயனடையுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. இத்தகவலை மாவட்டஆட்சியர் பிரதீப்குமார் தெரிவித்துள்ளார். 

இணையவழி மூலம் வேலை எனக் கூறி தனியார் நிறுவன அலுவலரிடம் ரூ. 33.42 லட்சம் மோசடி

தஞ்சாவூர், ஜன.11 -  இணையவழிய மூலம் வேலை எனக் கூறி, தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த தனியார் நிறுவன அலுவலரிடம் ரூ. 33.42 லட்சம் மோசடி செய்த மர்ம நபரை காவல் துறையினர் தேடி வருகின்றனர். தஞ்சாவூர் மாவட்டம், பூதலூர் வட்டத் தைச் சேர்ந்தவர் 37 வயது இளைஞர் திருச்சி யிலுள்ள தனியார் நிறுவனத்தில் முதுநிலை கணக்கு அலுவலராகப் பணியாற்றி வரு கிறார். இவருக்கு டெலிகிராம் செயலி மூலம் 2023, டிசம்பர் 21 ஆம் தேதி வந்த தகவலில் இணையவழி மூலம் டாஸ்க்களை நிறைவேற்றினால் பணம் சம்பாதிக்கலாம் என குறிப்பிடப்பட்டிருந்தது.  இதை உண்மை என நம்பிய இவரிடம் ஒவ்வொரு டாஸ்க்குக்கும் பணம் செலுத்த வேண்டும் என மர்ம நபர் கூறினார். இதன்படி, இணையவழியில் வங்கிக் கணக்கு மூலம் பணத்தை செலுத்திய தனியார் நிறுவன அலுவலருக்கு முதலில் லாபத் தொகை கிடைத்தது. அதன் பிறகு பல்வேறு கட்டங்களாக ரூ. 33 லட்சத்து 42 ஆயிரத்து 350 அனுப்பிய தொகைக்கு பணம் கிடைக்கவில்லை.  இது தொடர்பாக மர்ம நபருக்கு தனியார் நிறுவன அலுவலர் தொடர்பு கொள்ள முயன்றபோது எதிர்முனையில் எடுக்க வில்லை. இதையடுத்து, தான்  ஏமாற்றப்பட்டதை உணர்ந்த தனியார் நிறுவன அலுவலர் தஞ்சாவூர் இணைய தளக் குற்றப் பிரிவில் புகார் அளித்தார். இதன் பேரில் காவல் துறையினர் செவ்வாய்க்கிழமை வழக்குப் பதிந்து விசா ரணை மேற்கொண்டுள்ளனர்.

புதிய தொழிற்பள்ளிகள் தொடங்க,  அங்கீகாரம் புதுப்பிக்க விண்ணப்பங்கள் வரவேற்பு

திருச்சிராப்பள்ளி,ஜன,11, 2024-2025ஆம் கல்வியாண்டிற்கு புதிய தொழிற்பள்ளி கள் தொடங்குதல், அங்கீகாரம் புதுப்பித்தல், தொழிற்பள்ளி களில் புதிய தொழிற்பிரிவுகள், தொழிற்பிரிவுகளில் கூடுதல் அலகுகள் தொடங்குதல் ஆகியவற்றிற்கான விண்ணப் பங்கள் இணையதளம் மூலமாக வரவேற்கப்படுகின்றன. 2.1.2024முதல் www.skilltraining.tn.gov.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம். 2024-2025 ஆம் கல்வியாண்டிற்கு அங்கீகாரம் பெற ஒருதொழிற்பள்ளி, ஒரு இணையதள விண்ணப்பம் சமர்ப்பித்தால் போதுமானது. விண்ணப்பிக்கவுள்ள அனைத்து தொழிற்பிரிவுகள், கூடு தல் அலகுகளுக்கு தேவையான விவரங்கள் அனைத்தும் ஒரே விண்ணப்பத்தில் மட்டும் அளிக்கவேண்டும். அனைத்து தொழிற்பிரிவுகளுக்கும் சேர்த்து விண்ணப்ப கட்டணம் ரூ.5000- மற்றும் ஆய்வு கட்டணம் ரூ.8000- RTGS/NEFT மூலம் செலுத்த வேண்டும். விண்ணப்பிக்க வேண்டிய கடைசிநாள் 29.2.2024இதற்குபின் பெறப்படும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும். மேலும்,அங்கீகாரம் குறித்த தகவல் மற்றும் அறிவுரைகள் www.skilltraining. tn.gov.in என்ற இணையதளம் மூலம் தெரிந்துகொள்ள லாம். தொலைபேசிஎண்    :044 -22501006 (113)  Email:detis chennai@gmail.com இத் தகவலை, திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் தெரிவித்துள்ளார்.

திருச்சியில்  ரூ.1.15 கோடியில் அரசு நலத்திட்ட உதவிகள்

திருச்சிராப்பள்ளி,ஜன,11, திருச்சிராப்பள்ளி மாவட்டம், தொட்டியம் வட்டம், எம்.களத்தூர் கிராமம், தலைமலைப்பட்டி அரசு உயர்நிலைப் பள்ளி வளாகத்தில் வியாழனன்று சிறப்பு மனு நீதி நாள் முகாம் நிறைவு விழா நடைபெற்றது. இந்த முகாமில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறையின் சார்பில் 20 பயனாளிகளுக்கு ரூ1.82 லட்சம் மதிப்பீட்டில் திருமண உதவித்தொகையும், 6 பயனாளிகளுக்கு ரூ 86400 மதிப்பீட்டில் முதியோர் ஓய்வூதிய தொகையும், 5 பயனாளிகளுக்கு ரூ72,000 மதிப்பீட்டில் விதவை உதவித்தொகையும், 1 பய னாளிக்கு ரூ 18 ஆயிரம் மதிப்பீட்டில் மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித் தொகையும், 75 பயனாளிகளுக்கு ரூ16.55 லட்சம் மதிப்பீட்டில் இயற்கை மரண உதவித்தொகைக்கான ஆணையும், 66 பய னாளிகளுக்கு ரூ 1.60 லட்சம் மதிப்பீட்டில் கல்வி உதவித்தொகையும், 5 பயனாளி களுக்கு ரூ2.50 லட்சம் மதிப்பீட்டில் இலவச வீட்டுமனை பட்டாக்களும், வேளாண் மைத்துறையின் சார்பில் 18 பயனாளி களுக்கு ரூ 1.34 லட்சம் மதிப்பீட்டில் வேளாண்மை உபகரணங்களும், தோட்டக்கலைத்துறையின் சார்பில் 54 பயனாளிகளுக்கு ரூ29.20 லட்சம் மதிப்பீட்டில் உபகரணங்களும், மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் 2 பயனாளிகளுக்கு ரூ15890 மதிப்பீட்டில் தையல் இயந்திரம் மற்றும் மூன்று சக்கர மதிவண்டியும், தமிழ்நாடு ஊரக பகுதி வாழ்வாதார இயக்கம் சார்பில் 5 பயனாளிகளுக்கு ரூ 2.50 லட்சம் மதிப்பீட்டில் தொழில் சமுதாய முதலீட்டு நிதியும், தமிழ்நாடு ஊரக பகுதி வாழ்வா தார இயக்கம் சார்பில் 5 பயனாளிகளுக்கு ரூ23.50 லட்சம் மதிப்பீட்டில் தொழில் துவக்க கடன் தொகையினையும், சமூக நலத்துறையின் சார்பில் 26 பயனாளி களுக்கு ரூ13 லட்சம் மதிப்பீட்டில் இரண்டு பெண்குழந்தைகளுக்கான பத்திரமும், வேளாண் சந்தைப்படுத்துதல் மற்றும் வணிகத்துறையின் சார்பில் 7 பய னாளிகளுக்கு ரூ13.22 லட்சம் மதிப்பீட்டிலு ம், ஆதிதிராவிடர் நலத்துறையின் சார்பில் 2 பயனாளிகளுக்கு ரூ13,380 மதிப்பீட்டில் தையல் இயந்திரமும், 10 பய னாளிகளுக்கு ரூ 8 லட்சம் மதிப்பீட்டில் முதலமைச்சரின் விபத்து நிவாரண உதவித் தொகையும், 85 பயனாளிகளுக்கு நத்தம் பட்டா மாற்றமும், 38 பயனாளிகளுக்கு கணினி பட்டா மாற்றமும், 117 பயனாளி களுக்கு உட்பிரிவு பட்டா மாற்றமும், 194 பயனாளிகளுக்கு நத்தம் பட்டா நகல் களும், 8 பயனாளிகளுக்கு வாரிசு சான்றி தழ்களும் என மொத்தம் 749 பயனாளி களுக்கு ரூ.1.15 கோடி மதிப்பீட்டில் அரசின் பல்வேறு நலத்திட்ட உதவிகளை முசிறி சட்டமன்ற உறுப்பினர் தியாக ராஜன், முசிறி வருவாய் கோட்டாட்சியர் ராஜன் ஆகியோர் வழங்கினர்.