தஞ்சாவூர், பிப்.10- தஞ்சாவூர் மாவட்டம் திருக் கானூர்பட்டி ஊராட்சியில் கட்டப்பட்டு வரும் புதிய பால்பண்ணை தொழிற் சாலை கட்டுமானப் பணி களை, தமிழ்நாடு பால் உற் பத்தியாளர் கூட்டுறவு இணையம் நிர்வாக இயக்கு நர் டாக்டர் எஸ்.வினித், மாவட்ட ஆட்சியர் தீபக் ஜேக்கப் ஆகியோர் வெள்ளிக் கிழமை ஆய்வு செய்தனர். திருக்கானூர்பட்டியில் கட்டப்பட்டு வரும் புதிய பால் பண்ணை தொழிற்சாலை கட்டுமானப் பணிகள் நடை பெற்று வருவதை பார்வை யிட்டு, இயந்திரங்களை உட னடியாக நிறுவ தொடர் புடைய ஒப்பந்தக்காரர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கினர். தொடர்ந்து, தஞ்சாவூர் நாஞ்சிக்கோட்டை ஊராட்சி யில் மத்திய பண்ணையில் புதிதாக அமைய உள்ள ஒரு லட்சம் லிட்டர் திறனுடைய பால் பதனிடும் தொழிற்சா லையில் கள ஆய்வு செய்த னர். பால் உற்பத்தியா ளர்கள் மற்றும் சங்க தொழி லாளர்களின் குறைகளை கேட்டு தீர்வு காண சம்பந்தப் பட்ட அலுவலர்களுக்கு தமிழ் நாடு பால் உற்பத்தியாளர் கூட்டுறவு இணையம் நிர்வாக இயக்குநர் டாக்டர் எஸ்.வினித் உத்தரவிட்டார். ஆய்வின் போது ஆவின் பொது மேலாளர் எஸ்.சர வணகுமார், பால்வளம் துணைப் பதிவாளர்கள் எஸ். கே.விஜயலெட்சுமி (தஞ்சா வூர்), வி.நவராஜ் (திருவா ரூர்), கால்நடை மருத்துவ மேலாளர் மரு.எஸ்.மாதவ குமரன், ஆவின் உதவி பொதுமேலாளர் (பொறியி யல்) மணிகண்டன், துணைப் பொது மேலாளர் (கட்டுமா னம்) ஜோஸ்பின் நிர்மலா மற்றும் பலர் கலந்து கொண் டனர்.