மயிலாடுதுறை, ஜன.3- மயிலாடுதுறை மாவட் டம் செம்பனார்கோவில் வட்டாரத்தில் சம்பா நெற் பயிர் சாகுபடி வயல்களில் பூச்சி நோய் குறித்து வேளாண் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். செம்பனார்கோவில் வட்டாரத்தில் சுமார் 32 ஆயிரம் ஏக்கரில் சம்பா நெற் பயிர் சாகுபடி செய்யப்பட் டுள்ளது. இந்நிலையில் நெற்பயிர்கள் அறுவடைக்கு பல்வேறு பருவங்களில் உள்ளன. தற்போது அதிகள வில் குளிர்ச்சி மற்றும் பனிப் பொழிவு இருப்பதால் நெற் பயிர்களில் பூச்சி நோய் தாக்குதல் உள்ளதா என நல்லாடை பகுதியில் சாகு படி செய்யப்பட்டுள்ள நெற் பயிர் வயல்களில் வேளா ண்மை உதவி இயக்குநர் சுப்பையன் பரிசோதனை செய்து ஆய்வு மேற்கொண் டார். ஆய்வின்போது துணை வேளாண்மை அலுவலர் உமாபசுபதி, உதவி வேளா ண்மை அலுவலர்கள் ரவிச் சந்திரன், மாணிக்கம் உள் ளிட்டோர் உடனிருந்தனர்.