மதுரை, மார்ச் 24- இளைஞர் அமைப்புகள் சார்பில் மாவீரன் பகத்சிங், ராஜகுரு, சுகதேவ் ஆகியோர் நினைவு தினத்தை முன்னிட்டு பாசிசத்திற்கு எதிராக நாட்டில் ஜனநாயகத்தை பாதுகாக்க புதிய கல்விக் கொள்கைக்கு எதிராக தொடர்ந்து நாடாளுமன்றத்தில் குரல் கொடுத்து வரும் ‘இந்தியா’ கூட்டணி சார்பில் மதுரை தொகுதியில் போட்டியிடும் மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர் சு. வெங்கடேசனை ஆதரித்து சனிக்கிழமை யன்று மதுரை ஜான்சிராணி பூங்கா, நேதாஜி சிலை அருகே பிரச்சாரம் நடைபெற்றது. பிரச்சாரத்திற்கு திமுக இளைஞரணி நிர்வாகி த.அன்பு, இந்திய மாணவர் சங்க மாவட்டச் செயலாளர் க.பாலமுருகன், இந் திய ஜனநாயக வாலிபர் சங்க மாவட்டச் செய லாளர் டி.செல்வா ஆகியோர் தலைமை வகித்தனர். முன்னதாக சுதந்திரப் போராட்ட வீரர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் சிலைக்கும், ராஜகுரு, பகத்சிங், சுகதேவ் ஆகியோர் உரு வப் படத்திற்கும் மாலை அணிவித்து மரி யாதை செலுத்தினர். நிகழ்ச்சியை மதுரை மாநகராட்சி துணை மேயர் தி.நாகராஜன் துவக்கி வைத்து பேசி னார். தொடர்ந்து கூட்டத்தில் திராவிடர் மாண வர் கழகம் சார்பில் தேவராஜ் பாண்டியன், விசிக இளம் சிறுத்தைகள் பாசறை சார்பில் முத்துக்குமார், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் மாநில துணைத்தலைவர் சரவண தமிழன், இந்திய மாணவர் சங்க மாநிலச் செயலாளர் அரவிந்த் மக்கள் நீதி மய்யம் மண்டலச் செயலாளர் அழகர், காங்கிரஸ் இளைஞரணி மாணவர் அணி நிர்வாகி பிர காஷ் ஆகியோர் பேசினர். கூட்டத்தில் திமுக வட்டச் செயலாளர் நாகையா, இந்தியா ஜனநாயக வாலிபர் சங்க மத்தியக் குழு உறுப்பினர் என்.நிருபனா, மாவட்டப் பொருளாளர் எஸ்.வேல்தேவா, இந்தியா மாணவர் சங்க மாவட்டத் தலை வர் டேவிட் துரைராஜ், மதிமுக இளைஞரணி சார்பில் ஈஸ்வரன், திராவிட கழக புறநகர் மாவட்டச் செயலாளர் வெங்கடேஷ், மக்கள் நீதி மய்யம் மண்டலச் செயலாளர் பரணி ராஜ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பகுதிக் குழு செயலாளர் பி.ஜீவா, சிபிஐ மாவட்டச் செய லாளர் எம்.எஸ்.முருகன், திமுக பகுதி செய லாளர் கண்ணன் உள்ளிட்டு ஏராளமான கலந்து கொண்டனர். இந்திய ஜனநாயக வாலிபர் சங்க மாவட்ட தலைவர் பாவேல் சிந்தன் நன்றி கூறினார்.
இளம் வாக்காளர்கள் சு.வெங்கடேசனுக்கே ஆதரவு
இந்திய மாணவர் சங்க மாநிலச் செய லாளர் அரவிந்த்சாமி பேசுகையில், ‘‘மதுரை உட்பட 39 தொகுதிகளி லும் போட்டியிடும் திமுக தலைமையிலான ‘இந்தியா’ கூட்டணியில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்து வருகிறோம். மதுரை தொகுதியில் ஏப்ரல் 16-ஆம் தேதி வரை தொடர் பிரச்சா ரம் மேற்கொள்ளப்படும். குறிப்பாக கல் லூரி மாணவ-மாணவிகள், முதல் முறை யாக வாக்களிக்கும் வாக்காளர்களைச் சந்தித்து சு.வெங்கடேசனுக்கு வாக்கு சேக ரிக்கும் பணியை ஞாயிறன்று முதல் மேற் கொள்கிறோம். ஒத்திசைவுப் பட்டியலில் உள்ள கல்வி யை மாநில அரசின் பட்டியலுக்குக் கொண்டு வரவேண்டும் என்ற மாணவர் அமைப்பின் கோரிக்கையை சு.வெங்க டேசன் எம்.பி., தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். இந்தத் தேர்தலில் ‘இந்தியா’ கூட்டணி வெற்றி பெற்று ஆட்சியமையும் போது இந்தக் கோரிக்கை நிச்சயம் நிறை வேறும் என்ற நம்பிக்கை எங்களுக்கு உள் ளது. கல்வி காவியமாவது முற்றாக தடுத்து நிறுத்தப்பட வேண்டுமெனில் தமிழகத்தில் திமுக தலைமையிலான இந்தியா கூட்டணி அனைத்துத் தொகுதிகளிலும் வெற்றி பெற வேண்டும். நாடு முழுவதும் இடதுசாரிக் கட்சிகளின் பலமும் அதிகரிக்கும் போது கல்வியில் புகுத்தப்பட்ட காவிக் கொள்கை கள் முற்றாக நீக்கப்படும் என்பதை எங்க ளால் அறுதியிட்டுக் கூற முடியும். இந்தியாவிலேயே அதிகக் கல்விக் கடனை மாணவ-மாணவிகளுக்கு பெற் றுத் தந்தது மதுரை மக்களவை உறுப்பி னர் சு.வெங்கடேசன். அது மட்டுமல்ல மாற்றுத் திறனாளிகளுக்கு அதிக உதவி களைச் செய்ததும் சு.வெங்கடேசன் தான். ஒன்றிய அமைச்சரே ஒப்புக்கொண்டு மது ரையில் நடைபெற்ற நிகழ்வில் அதை அறி வித்தும் விட்டும் சென்றார். கல்விக் கடன் கள் குறிப்பாக கிராமப்புற மாணவ-மாண விகளுக்கு அதிகளவில் பெற்றுத் தரப் படும் என சு.வெங்கடேசன் அளித்துள்ள வாக்குறுதியை முன்னிறுத்தி பிரச்சாரம் நடைபெறும். ஜனநாயகத்திற்கு எதிராக இந்திய நாட்டின் இறையாண்மை மற்றும் ஒற்றுமை யை சீர்குலைக்க ஒன்றிய பாஜக அரசால் கொண்டுவரப்பட்டு, அதிமுகவின் ஆத ரவோடு நிறைவேற்றப்பட்ட குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்க்க ஒன்றிணைந் துள்ளோம். வருடத்திற்கு இரண்டு கோடி பேருக்கு வேலை கொடுப்போம் என ஏமாற்றிய மோடி அரசிற்கு இளம் வாக்கா ளர்கள், இளைஞர்கள் தங்களது எதிர்ப்பை வாக்குகள் மூலம் தீர்மானிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தியும் எங்களது பிரச் சாரம் அமையும்’’ என்றார். மதுரை இளைஞர்களின் குரல் சு.வெங்கடேசன் டி.செல்வராஜ் கூறுகையில், ‘‘இந் தியா முழுவதும் நிலவும் வேலையின் மைக்கு எதிராக வலுவான குரலை எழுப்பி யவர் மட்டுமல்ல, இப்பிரச்சனைக்காக இன்று வரை போராடி வருபவர். மதுரை ரயில்வே மைதானத்தை ஒன்றிய அரசு விற்க முயற்சித்த போது இளைஞர்களை, விளையாட்டு வீரர்களைத் திரட்டி போராட்டம் நடத்தி மைதானத்தை காப் பாற்றிக் கொடுத்துள்ளார். ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி மறுக்கப்பட்டபோது இளைஞர்களின் குரலால், மதுரை யின் குரலாய், தமிழகத்தின் குரலாய் எதி ரொலித்தவர். பாஜக - கார்ப்பரேட்டுகளின் கூட்டுக் கொள்ளைக்கு எதிராக குரல் கொடுத்தவர். ஒன்றிய அரசின் எழுத்துத் தேர்வுகளில் தமிழ் புறக்கணிக்கப்பட்டு இந்தி மட்டுமே என்ற நிலையில் தமி ழக இளைஞர்களுக்காக எழுத்துத் தேர்வு களில் தமிழையும் இடம் பெறச் செய்த வர் என்ற விஷயங்களை விளக்கி பிரச்சா ரம் செய்வோம்’’ என்றார்.