ஓய்வூதியர் சங்க தலைவர் துரைராஜ் இல்ல திறப்பு விழா
கும்பகோணம், ஜுன் 9- தமிழ்நாடு அரசு அனைத்துத் துறை ஓய்வூதியர் சங்க கும்பகோணம் வட்டத் தலைவர் துரைராஜ் - கிருஷ்ண வேணி ஆகியோர் இல்ல திறப்பு விழா தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் நடைபெற்றது.
புதிய இல்லத்தை தமிழ்நாடு அரசு அனைத்து துறை ஓய்வூதியர் சங்க மாநிலத் தலைவர் என்.எல்.சீதரன் திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் மாவட்டத் தலைவர் கலியமூர்த்தி, மாவட்டச் செயலர் தமிழ்மணி, வட்டச் செயலாளர் பக்கிரி சாமி, பொருளாளர் ராமமூர்த்தி, மாவட்ட செயற்குழு உறுப்பினர் அன்புமணி, கண்ணன் உட்பட உறவினர்கள், நண்பர்கள் கலந்து கொண்டனர்.
நீட் தேர்வு
705 மதிப்பெண்கள் பெற்று ஜெயங்கொண்டம் மாணவி சாதனை
அரியலூர், ஜூன் 9- இந்தியா முழுவதும் நீட் தேர்வானது கடந்த மே 5 ஆம் தேதி நடைபெற்றது. இத்தேர்வை அரியலூர் மாவட்டத்தில் 2364 பேர் தேர்வு எழுதினர்.
இந்நிலையில் அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண் டம்-விருத்தாச்சலம் சாலையில் வசிப்பவர் மருத்துவர் கள் ரவிசங்கர்-பிரபாவதி தம்பதியரின் மகள் சஞ்சனா. இவர் நாமக்கல் கிரீன் பார்க் சிபிஎஸ்இ பள்ளியில் கல்வி பயின்று பிளஸ் 2 பொதுத்தேர்வில் 490 மதிப்பெண்கள் பெற்றிருந்தார். இதை தொடர்ந்து நீட் தேர்வில் பயிற்சி பெற்று தேர்வை எழுதினார்.
இதில் 705 மதிப்பெண்கள் பெற்று மாநில அளவில் மூன்றாம் இடத்தை பிடித்து சாதனை படைத்துள்ளார். நீட் தேர்வில் வெற்றி பெற்ற மாணவியின் தந்தை ரவிசங்கர் உடையார்பாளையம் அரசு மருத்துவமனையில் சிறப்பு மருத்துவ அதிகாரியாக பணியாற்றி வருகிறார்.
திமுக தொழிலதிபர் வெட்டிக் கொலை
தஞ்சாவூர், ஜூன் 9- தஞ்சாவூரில், திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த திமுக தொழிலதிபர் மர்ம நபர்களால் ஞாயிற்றுக்கிழமை அரிவா ளால் வெட்டி கொலை செய்யப்பட்டார்.
திருவாரூர் மாவட்டம், சோழங்கநல்லூரைச் சேர்ந்த வர் கே.பாபு (48). திமுகவைச் சேர்ந்த தொழிலதிபரான இவர், காரைக்கால் துறைமுகத்தில் போக்குவரத்து வாகன ஒப்பந்ததாரராக இருந்து வந்தார்.
இவர் தஞ்சாவூரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற புது மனை புகுவிழாவில் பங்கேற்பதற்காக காரில் தனது மகன் பாலாவுடன் திருவாரூரிலிருந்து தஞ்சாவூருக்கு முற்பகல் வந்தார். தஞ்சாவூர் ஞானம் நகருக்கு வந்த போது, பாலா அப்பகுதியிலுள்ள கடையில் மொய் கவரை வாங்கிவிட்டு மீண்டும் காரில் ஏறினார்.
அப்போது எதிரே வந்த கார் இவர்களது காரை வழி மறித்து நிறுத்தி ஒலிப்பானை மிகுந்த சப்தத்துடன் எழுப்பி யது. இதனால், காரை விட்டு இறங்கி வந்து கேட்ட பாபுவை எதிரே வந்த காரில் இருந்து இறங்கிய மர்ம நபர்கள் அரிவா ளால் வெட்டிவிட்டு தப்பிச் சென்றனர். இதில் பலத்த காய மடைந்த பாபு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
தகவலறிந்த மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் ஆசிஷ் ராவத், கூடுதல் காவல் கண்காணிப்பாளர் வி.ஜெயச் சந்திரன், துணைக் கண்காணிப்பாளர்கள் நித்யா (வல்லம்), பி.என். ராஜா (தஞ்சாவூர் நகரம்) உள்ளிட்டோர் நிகழ்விடத்துக்கு சென்று விசாரணை மேற்கொண்டனர்.
இதில், தொழில் போட்டி காரணமாக தனது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக திருவாரூர் மாவட்டம், வைப்பூர் காவல் நிலையத்தில் பாபு ஏற்கனவே புகார் செய்தது தெரிய வந்தது. இதன் காரணமாக இச்சம்பவம் நிகழ்ந்தி ருக்கலாம் என காவல் துறையினர் சந்தேகிக்கின்றனர்.
இதன் அடிப்படையில் தாலுகா காவல் நிலையத்தி னர் வழக்குப் பதிந்து 2 பேரை பிடித்து விசாரணை மேற் கொண்டு வருகின்றனர்.
திருச்சி விமான நிலையத்தில்
மடிக்கணினியில் மறைத்து தங்கம் கடத்தல்
திருச்சி விமான நிலையத்தில் மடிக்கணினியில் மறைத்து தங்கம் கடத்தல்
மேலும் அவர்களது உடமைகளையும் தனித்தனியே சோதனையிட்டனர். இந்த சோதனையில் 3 பயணிகள் தாங்கள் கொண்டு வந்த மடிக்கணினி (லேப்டாப்) அடிப் பாகத்தில் தங்கத்தை தகடுகளாக மறைத்து எடுத்து வந்தது தெரிய வந்தது. மறைத்து கடத்தி வந்த ரூ.24 லட்சம் மதிப்பிலான 390 கிராம் தங்கத்தை அதிகாரிகள் பறி முதல் செய்தனர். மேலும் மூன்று பயணிகளிடம் சுங்கத்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.