இன்று லாரிகள் வேலை நிறுத்தம்
திருச்சிராப்பள்ளி, நவ.8 - காலாண்டு வரி உயர்வை ரத்து செய்ய வேண்டும். ஆன்- லைனில் அபராதம் விதிப்பதை ரத்து செய்ய வேண்டும். அரசு மணல் குவாரிகளை உடனே திறக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக் கைகளை வலியுறுத்தி வியாழ னன்று (நவ.9) காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை ஒரு நாள் மட்டும் தமிழ்நாடு முழுவ தும் லாரிகள் வேலை நிறுத்தம் நடைபெறுகிறது என லாரி உரி மையாளர்கள் சங்க மாநில துணைத்தலைவர் சுப்பு தெரி வித்துள்ளார்.
புற்றுநோய் தின விழிப்புணர்வு
அரியலூர், நவ.8- தேசிய புற்றுநோய் தினத்தை முன்னிட்டு அரிய லூர் மாவட்டம், சிறுவளூர் அரசு உயர்நிலைப் பள்ளியில் செவ்வாயன்று விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. பள்ளி தலைமை ஆசிரியர் சின்ன துரை தலைமை வகித்தார். கருப்பூர், பொய்யூர் சுகாதார ஆய் வாளர் ராஜேந்திரன் உரை யாற்றினார். சுகாதார ஆய்வா ளர் அருண்குமார் பள்ளி மாண வர்களிடையே விழிப் புணர்வை ஏற்படுத்தினார்.
பருத்தி மறைமுக ஏலம்
பாபநாசம், நவ.8 - தஞ்சாவூர் விற்பனைக் குழு பாபநாசத்தை அடுத்த கபிஸ்தலம் அருகே கீழக் கொட்டையூர் ஒழுங்கு முறை விற்பனைக் கூடத்தில் பருத்தி மறைமுக ஏலம் நடந்தது. விற்பனைக் கூட கண்காணிப் பாளர் பிரியமாலினி தலைமை வகித்தார். மேற்பார்வையாளர் பிரசாத் முன்னிலை வகித் தார். பருத்தி ஏலத்தில் கும்ப கோணம் மற்றும் இதைச் சுற்றி யுள்ள கிராமங்களில் இருந்து 92 விவசாயிகள் சராசரியாக 91 குவிண்டால் பருத்தி எடுத்து வந்தனர். கும்பகோணம், திருப்பூர் உள்ளிட்ட பகுதி களைச் சார்ந்த வணிகர்கள் ஏலத்தில் பங்கேற்று அதிக பட்சம் குவிண்டாலுக்கு ரூ.6619, குறைந்தபட்சம் ரூ.5779, சராசரி ரூ.5989 என விலை நிர்ணயம் செய்தனர். பருத்தி யின் சராசரி மதிப்பு ரூ.5 லட்சம்.
சாலை அமைக்கும் பணி துவக்கம்
தஞ்சாவூர், நவ.8 - தஞ்சாவூர் மாவட்டம் பேரா வூரணி சட்டமன்றத் தொகுதிக் குட்பட்ட, அலிவலம் ஊராட்சி தேவர் குடியிருப்பு பகுதியில், பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று, முதல மைச்சர் சிறப்பு கிராமச் சாலை கள் திட்டத்தின்கீழ், சட்டமன்ற உறுப்பினர் நா.அசோக்குமார் பரிந்துரையை ஏற்று, சுமார் 1,500 மீட்டர் சாலை அமைக்கப் படுகிறது. இதேபோல், பூவா ளூர் ஊராட்சி நெய்வவிடுதி சாலையும் அமைக்கப்படு கிறது. இரண்டு சாலைப் பணி களையும் சட்டமன்ற உறுப்பி னர் நா.அசோக்குமார் புதன் கிழமை தொடங்கி வைத்தார்.
கால்நடை விழிப்புணர்வு முகாம்
அரியலூர், நவ.8- அரியலூர் மாவட்டம், மணக் குடி கிராமத்தில் கால்நடை பரா மரிப்புத் துறை சார்பில் சிறப்பு கால்நடை சுகாதார மற்றும் விழிப்புணர்வு முகாம் செவ்வா யன்று நடைபெற்றது. முகாமை ஊராட்சித் தலைவர் சங்கீதா தொடக்கி வைத்தார். அரிய லூர் கோட்ட கால்நடை பராமரிப் புத் துறை உதவி இயக்குநர் ரிச்சர்ட் ராஜ் முன்னிலை வகித் தார். முகாமில் பெரிய, சிறிய மணக்குடி மற்றும் நுரையூர் உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த 445 கால்நடைகளுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. முகாம் முடிவில், கன்றுகள் பேரணி நடத்தப்பட்டு, பேரணி யில் கலந்து கொண்ட 22 கிடேரி கன்றுகளில், சிறந்த 10 கிடேரி கன்றுகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
சிறுமிக்கு கட்டாயத் திருமணம்: 4 பேருக்கு 22 ஆண்டு சிறை
அரியலூர், நவ.8- சிறுமியை கட்டாயப்படுத்தி திருமணம் செய்த வழக்கில் இளைஞர் உள்பட 4 பேருக்கு தலா 22 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து அரியலூர் மகளிர் நீதிமன்றம் தீர்ப்பளித் தது. அரியலூர் மாவட்டம் திருமானூரை அடுத்த குந்தபுரம், காலனித் தெருவைச் சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன் (23). இவர், கடந்த 2021 ஆம் ஆண்டு 11 ஆம் வகுப்பு படித்து வந்த 15 வயது சிறுமியை காதலித்து வந்துள்ளார். இதற்கு அச்சிறுமி யின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், ராதா கிருஷ்ணன் ஊர் நாட்டமைகள் மூலம் பேசி, சிறுமியின் பெற்றோர் விருப்பமில்லாமல் அச்சிறுமியை கட்டாயப்படுத்தி கடந்த 23.5.2021 ஆம் ஆண்டு திருமணம் செய்துள்ளார். இதற்கு ராதாகிருஷ்ணனின் பெற்றோர் பழனியாண்டி (55), லதா (45), சகோதரர் பாலச்சந்தர் (25) ஆகியோர் உடந் தையாக இருந்துள்ளனர். இதுகுறித்த புகாரின் பேரில், அரிய லூர் அனைத்து மகளிர் காவல் துறையினர் வழக்குப் பதிந்து மேற்கண்ட 4 பேரையும் கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை அரியலூர் மகளிர் நீதிமன்றத் தில் நடைபெற்று வந்தது. இவ்வழக்கை விசாரித்து வந்த நீதிபதி செல்வம், குற்றவாளிகள் 4 பேருக்கும் தலா 22 ஆண்டு கள் சிறை தண்டனையும், ரூ.15 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார். இதையடுத்து அவர்கள் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
ஆசிட் குடித்த பெண்ணுக்கு மாற்று உணவுக் குழாய் அறுவை சிகிச்சை திருச்சி அரசு மருத்துவமனை மருத்துவர்கள் சாதனை
திருச்சிராப்பள்ளி, நவ.8 - திருச்சியை சேர்ந்த 20 வயது பெண் கடந்த 7 மாதங்களுக்கு முன்பு ஆசிட் குடித்தார். இதில் அவரது உணவுக் குழாயில் சுருக்கம் ஏற்பட்டது. இதனால் கடந்த 7 மாதங்களாக வாய் வழியாக உணவோ, தண்ணீரோ உட் கொள்ள முடியாமல் இருந்தார். இந்நிலையில் எண்டோஸ்கோப்பி முறை யில் உணவு குழாய் விரிவாக்க சிகிச்சையை தனியார் மருத்துவமனையில் மேற்கொண் டார். பின்னர் கடந்த ஆகஸ்ட் மாதம் மேல் சிகிச்சைக்காக திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனையில் கவலைக் கிடமான நிலையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவரை பரிசோதித்த போது, நெஞ்சுப் பகுதியில் உணவுக்குழாயில் ஓட்டை விழுந்திருந்தது கண்டுபிடிக்கப்பட் டது. மேலும் நெஞ்சில் தங்கியிருந்த கழிவுப் பொருட்கள் வெளியேற ஒரு குழாய் அமைக்கப்பட்டது. அரசு மருத்துவமனை டீன் நேரு, மருத்து வமனை கண்காணிப்பாளர் அருண்ராஜ் வழி காட்டுதல்படி மருத்துவர்கள் கண்ணன், கார்த்திகேயன், சங்கர், ராஜசேகரன், சுதாகர், மயக்கவியல் குழு மருத்துவர்கள் சந்திரன், இளவரசன் ஆகியோர் அறுவை சிகிச்சை மூலம் உணவு குழாய்க்கு மாற்றாக, 40 - 45 சென்டிமீட்டர் நீளத்துக்கு ஒரு குழாய் உரு வாக்கப்பட்டது. அந்த குழாய் இரைப்பைக்கும் நெஞ்சு எலும்பிற்கும் பின்பகுதியில், முற்றிலும் புதிய பாதையை உருவாக்கி, அதை கழுத்து வரை எடுத்து வந்து தொண்டை பகுதியில் மீதமிருந்த உணவு குழாயுடன் சேர்க்கப்பட்டது. இந்த அறுவை சிகிச்சை சுமார் 7 மணி நேரம் நடைபெற்றது. பின்னர் திரவ உணவும், படிப்படியாக திட உணவும் கொடுக்கப்பட்டது. தற்போது அவர் வாய் மூலம் திட உணவு உட்கொள்கிறார். ஆசிட் குடித்த பெண்ணுக்கு அறுவை சிகிச்சை செய்து குணப்படுத்தி, சாதனை படைத்துள்ளனர் அரசு மருத்துவர் கள். இவர்களை டீன் நேரு பாராட்டினார்.
‘நியூஸ் கிளிக்’ முடக்கத்துக்கு எதிராகப் போராட்டம்
தஞ்சாவூர், நவ.8 - நியூஸ் கிளிக் பத்திரிகை மீதான முதல் தகவல் அறிக்கை நகல் எரிப்பு நாடு தழுவிய போராட்டம் ஐக்கிய விவசாயிகள் முன்னணி சார்பில் திங்கள்கிழமை மாலை நடைபெற்றது. தஞ்சை ரயிலடியில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு, ஐக்கிய விவசாயிகள் முன்னணி தஞ்சை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் என்.வி.கண்ணன் தலைமை வகித்தார். ஐக்கிய விவசாயிகள் முன்னணி உறுப்பினர்கள் பங் கேற்றனர். அரியலூர் அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் காந்தி பூங்கா முன்பு நடை பெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு விவசாயிகள் சங்க ஒன்றியச் செய லாளர் தியாகராஜன் தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் மணி வேல், மாவட்டத் தலைவர் செந்தில்வேல், சிபிஎம் ஒன்றியச் செயலாளர் வெங்கடாசலம், மாதர் சங்க மாவட்டத் தலைவர் பத்மாவதி, வாலிபர் சங்க மாவட்டத் தலைவர் ரவீந்தரன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். கரூர் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் தோகைமலை பேருந்து நிலையம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சங்கத்தின் ஒன்றியச் செயலா ளர் ஏ.முனியப்பன் தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் கே.சக்தி வேல், சிபிஎம் ஒன்றியச் செயலாளர் ஏ.சுப்பிரமணியன், மாவட்டக் குழு உறுப்பினர் எ.பெருமாள் ஆகியோர் கண்டன உரையாற்றினர். ஒன்றிய குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
விபத்தில்லா தீபாவளி: விழிப்புணர்வு நிகழ்ச்சி
கும்பகோணம், நவ.8 - கும்பகோணம் கார்த்தி வித்யாலயா பள்ளியில் மாணவ-மாணவியர் களுக்கு விபத்தில்லா தீபாவளி பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சி நடை பெற்றது. தமிழ்நாடு தீயணைப்பு மீட்பு பணிகள் துறை மற்றும் கார்த்தி வித்யா லயா கல்விக் குழுமம் இணைந்து நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட் டிருந்தது. நிகழ்ச்சியில் பள்ளி மாணவ-மாணவியர்கள் கலந்து கொண்டனர். தீய ணைப்பு துறை நிலைய அதிகாரி கே.பாலசுப்பிரமணியன், தீபாவளி யன்று பெரியவர்கள் முன்னிலையில், பருத்தி ஆடைகளை அணிந்து கொண்டு வெடி வெடிக்க வேண்டும். எதிர்பாராத விதமாக தீ ஏற்பட்டால் எவ்வாறு அணைக்க வேண்டும் என்பதை செயல் மூலம் விளக்கினார். விழிப் புணர்வு நிகழ்ச்சியில் தீயணைப்பு துறை சார்ந்த பல்வேறு பணியா ளர்கள் கலந்து கொண்டனர். மேலும் பட்டாசு வெடிக்கும்போது செய்ய வேண்டியவை மற்றும் செய்யக்கூடாதவை குறித்து துண்டு பிரசுரங்கள் மூலம் எடுத்துரைக் கப்பட்டது.
சாலையின் குறுக்கே வந்த மாடு: விபத்தில் சிக்கி பொறியாளர் பலி
தஞ்சாவூர், நவ.8 - மாடு குறுக்கே வந்ததால், இரு சக்கர வாகனத்தில் சென்ற குடிநீர் வடிகால் வாரிய நிர்வாகப் பொறியாளர் விபத்தில் படுகாயமடைந்து உயிரி ழந்தார். தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி சாலை அன்னை சாவித்திரி நகரைச் சேர்ந்தவர் தமிழ்ச்செல்வன் (59). இவர் தஞ்சாவூர் குடிநீர் வடிகால் வாரி யத்தில் நிர்வாக பொறியாளராக பணியாற்றி வந்தார். இவர் திங்கள் கிழமை இரவு மோட்டார் சைக்கிளில் சென்றார். தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி சாலை, மூலிகைப் பண்ணை எதிரில் வந்த போது, சாலையில் பசு மாடு ஒன்று குறுக்கே புகுந்தது. பசு மாடு மீது மோதாமல் இருக்க தமிழ்ச்செல்வன் மோட்டார் சைக்கிளை திருப்பியுள்ளார். இதில் கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் அருகில் இருந்த காம்பவுண்ட் சுவர் மீது மோதியது. இதனால் தூக்கி வீசப்பட்ட தமிழ்ச்செல் வன் படுகாயமடைந்தார். அருகில் உள்ளவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக் காக தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே தமிழ்ச்செல்வன் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்த தமிழ்செல்வனின் மனைவி சற்குண சர்சோனா அளித்த புகாரின் பேரில், தஞ்சாவூர் நகர போக்குவரத்து விசாரணை பிரிவு காவல் துறையினர் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மக்கள் தொடர்பு முகாம்
புதுக்கோட்டை, நவ.8 - புதுக்கோட்டை மாவட்டம், மணமேல்குடி வட்டம், புதுக்குடி கிராமத்தில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை சார்பில், மக்கள் தொடர்பு முகாம் மாவட்ட ஆட்சியர் ஐ.சா.மெர்சி ரம்யா தலைமையில் புதன்கிழமை நடைபெற்றது. முகாமில் பல்வேறு துறைகளின் சார்பில் 327 பயனாளி களுக்கு ரூ.3,92,81,600 மதிப்பீட்டில் பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் வழங்கினர்.
சம்பளப் பாக்கியை கேட்டு நூறுநாள் வேலை தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
தஞ்சாவூர், நவ.8- நூறுநாள் வேலைத்திட்ட தொழிலா ளர்களின் சம்பளப் பாக்கியை வழங்கக் கோரி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, அனைத் திந்திய ஜனநாயக மாதர் சங்கம், அகில இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்கம் சேதுபாவாசத்திரம் ஒன்றியக் குழுக்களின் சார்பில் சேதுபாவாசத்திரம் வட்டார வளர்ச்சி அலுவலகம் முன்பு, மாதர் சங்க ஒன்றியத் தலைவர் மேனகா தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், மாதர் சங்க மாநிலச் செயலாளர் எஸ்.தமிழ்ச்செல்வி, மாவட்டச் செயலாளர் இ.வசந்தி, வழக்குரைஞர் வீ.கருப்பையா, சிபிஎம் ஒன்றியச் செயலாளர் ஆர்.எஸ். வேலுச்சாமி ஆகியோர் கண்டன உரை யாற்றினர். தொடர்ந்து, வட்டார வளர்ச்சி அலுவலர் சடையப்பனிடம் கோரிக்கை களை வலியுறுத்தி மனு அளிக்கப்பட்டது. அரியலூர் அரியலூர் மாவட்டம் செந்துறை ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சங்கத்தின் வட்டச் செயலாளர் கருப்பையா தலைமை வகித் தார். மாவட்டச் செயலாளர் கந்தசாமி ஆகி யோர் கண்டன உரையாற்றினர்.
பொறுப்பேற்பு
தஞ்சாவூர், நவ.8- தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி அருகே உள்ள ஊமத்தநாடு தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் செயலாள ராக பணிபுரிந்து வந்த தமி ழரசி பணி மாறுதலில் சென் றார். இதனால், குருவிக் கரம்பை தொடக்க வேளாண் மைக் கூட்டுறவு கடன் சங்கத்தில் செயலாளராக பணியாற்றி வரும் ஜி. மாதவன், பட்டுக்கோட்டை சரக துணைப்பதிவாளர் ஆணைப்படி ஊமத்தநாடு கடன் சங்க செயலாளராக (முழு கூடுதல் பொறுப்பு) பொறுப்பேற்றுக் கொண் டார்.