districts

img

தண்ணீரின்றி கருகும் பயிர்கள் விவசாயிகளை காக்க அரசு நடவடிக்கை எடுக்குமா

திருவாரூர், ஆக.9-

        டெல்டா பகுதிகளில் நேரடி நெல்  கொள்முதல் நிலையங்களை மேம்படுத்து வது குறித்த ஆலோசனை கூட்டம் திருவா ரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது.

       கூட்டத்தில் மாநில உணவுத்துறை செயலாளரும், வேளாண்மை துறை இயக்குநருமான அண்ணாதுரையிடம், தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்டத் தலைவர் எஸ்.தம்புசாமி கூறி யதாவது:4

      திருவாரூர் மாவட்டத்தில் வெட்டாறு, வெண்ணாறு, பாமணி, கோரையாறு காவிரி பிரிவு முடிகொண்டான், குட முருட்டி, சோழசூடாமணி, அரசலாறு, நாட்  டாறு, வெண்ணாறு பிரிவு பாண்டவை யாறு, வெள்ளையாறு கோரையாறு பிரிவு  அரிச்சந்திர நதி, கந்தபர்ச்சான் வாய்க்கால்  உள்ளிட்ட பாசன பகுதிகளில் தண்ணீர் பற்றாக்குறை நிலவுகிறது. பல பகுதிகளில் தண்ணீர் வற்றியும், சில பகுதிகளில் வயல்வெளி காய்ந்து, பயிர்கள் கருகிக் கொண்டிருக்கின்றன. தண்ணீர் பற்றாக்குறையை சரி செய்வ தற்கு மாநில அரசு, நீர்வளத்துறை, பொதுப்  பணித்துறை, வேளாண்மை துறை, வரு வாய்த் துறை இணைந்து போதிய நட வடிக்கைகளை எடுக்க வேண்டும். உட னடி நடவடிக்கை எடுத்தால் மட்டுமே குறு வைப் பயிரை பாதுகாக்க முடியும்.

     மாவட்டத்தில் மற்ற பகுதிகளைவிட கோட்டூர், முத்துப்பேட்டை, திருத்துறைப்  பூண்டி பகுதிகளில் தண்ணீர் பிரச்சனை தீவிரமாக உள்ளது. கடுமையான இடர்பாடு களுக்கிடையே விவசாயிகள், விவசாயப் பணிகளை செய்து வருகின்றனர். விவசாயி களை பாதுகாக்க தமிழ்நாடு அரசு உடனடி  நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.