கும்பகோணம், மார்ச் 13 - தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் கார்த்தி வித்யாலயா பன்னாட்டு பள்ளியில் புதனன்று மழலையர் வகுப்புகளுக்கான பட்டமளிப்பு விழா நடைபெற்றது. மழலையர் வகுப்பினை முடித்து, அடுத்த வகுப்பிற்கு தகுதிபெறும் குழந்தைகளுக்கு இந்த பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இவ்விழாவை பள்ளி தாளாளர் பூர்ணிமா கார்த்திகேயன் ஏற்பாடு செய்தார். போட்டிகளில் சிறப்பாக செயல்பட்ட மாணவர்களைப் பாராட்டி, பள்ளித் தலைவர் எஸ்.ஏ.கார்த்திகேயன் குழந்தைகளுக்கு பட்டங்களை வழங்கி கவுரவித்தார். இந்நிகழ்ச்சியில் குழந்தைகளின் பெற்றோர்கள், ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.