உதகை, செப்.23- உதகையில் அரசு நலத் திட்ட உதவிகள் வழங்கும் விழாவில், 100 பழங்குடியி னர்களுக்கு ரூ.5 கோடியே 73 லட்சம் ரூபாய் மதிப்பிலான வீடுகள் வழங்கும் ஆணையை தமிழ்நாடு சுற்றுலாத் துறை அமைச்சர் திங்களன்று வழங்கினார். நீலகிரி மாவட்டம், உதகையில் உள்ள பழங்குடியினர் பண்பாட்டு மையத்தில் அர சின் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா தமிழ்நாடு சுற்றுலாத் துறை அமைச்சர் கா.ராம சந்திரன் தலைமையில் நடைபெற்றது. மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடி யினர் நலத்துறை சார்பில் தாட்கோ மூலம் கட்டப்பட்ட, பழங்குடியினர்களின் வீடுகள் சேதம் அடைந்துள்ளது. இந்நிலையில், 100 பழங்குடியினர்களுக்கு 5 கோடியே 73 லட்சம் மதிப்பிட்டில் வீடு வழங்குதல், கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் 115 பய னாளிகளுக்கு ரூ. 4 கோடியே 2 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பீட்டில் வீடு வழங்குதல், மக ளிர் சுய உதவி குழுக்களுக்கு கடனுதவி ரூ. 1 கோடியே 20 லட்சம் மதிப்பீட்டில் வங்கிகள் மூலம் கடனுதவி வழங்குதல் உள்ளிட்ட 426 பயனாளிகளுக்கு 12 கோடியே 14 லட்சம் ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை அமைச்சர் வழங்கினார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் லட்சுமி பவ்யா தண்ணீரு, துணை ஆட்சி யர் கௌஷிக் உள்ளிட்ட அரசு துறை அதிகாரி கள் பலர் கலந்து கொண்டனர்.