districts

img

நாட்டிலே முதல்முறையாக நெல்லை அரசு மருத்துவமனையில் சிறுமிக்கு ஆஞ்சியோ பிளாஸ்டி சிகிச்சை

திருநெல்வேலி அக் 21- நாட்டிலேயே முதல் முறையாக, நெல்லை அரசு பல்நோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையில் 16 வயது சிறுமிக்கு முதன்மை ஆஞ்சியோ பிளாஸ்டி சிகிச்சை அளித்து அரசு மருத்துவர்கள் சாதனை படைத் துள்ளனர். இதுகுறித்து நெல்லை  அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை  முதல்வர் ரேவதிபாலன், இதயவியல்  துறைத் தலைவர் ரவிச்சந்திரன் எட்வின் ஆகி யோர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: தென்காசி மாவட்டம் ஆழ்வார் குறிச்சியைச்  சேர்ந்த ஜஸ்டின் துரை மகள் வினோதினி (16). பிளஸ்- 2 மாணவியான இவருக்கு 3 மாதங் களுக்கு முன்பு தலைவலி ஏற்பட்டுள்ளது. மேலும், ரத்த சோகை, உயர் ரத்த அழுத்தம்  இருப்பதும் தெரிய வந்தது. இந்த நிலையில், அவருக்கு 20 நாள் களுக்கு முன்பு நெஞ்சுவலி ஏற்பட்டதை யடுத்து பாளையங்கோட்டையில் உள்ள  நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவ மனையில் கடந்த 7-ஆம் தேதி அனுமதிக்கப் பட்டார். அவருக்கு பரிசோதனை மேற் கொள்ளப்பட்டதில் கண் பார்வை மங்கலாக இருந்ததோடு, உயர் ரத்த அழுத்தம், நெஞ்சுவலி, மூச்சுத்திணறல், சிறு நீரகத்தில் பாதிப்பு ஏற்பட் டிருப்பது தெரிய வந்தது. இந்த பரிசோதனையில் அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டிருந்ததும் தெரியவந்தது. ரத்தக் குழாயில் அவருக்கு 100 சதவீத அடைப்பு இருந்தது.இதையடுத்து 7-ஆம் தேதி இரவு இதயத்துக்குச் செல்லும் ரத்தக் குழாய்களில் உள்ள அடைப்பை சரி செய்ய முடிவு செய்யப்பட்டது. அவருக்கு உயர் ரத்த அழுத்தம் இருந்ததால், த்ராம்போலை சிஸ் மருந்தை செலுத்தாமல், நேரடியாக முதன்மை ஆஞ்சியோபிளாஸ்டி சிகிச்சை அளிக்கப்பட்டது. சிகிச்சை வெற்றி பெற்ற தால், அவர் பூரண குணமடைந்துள்ளார். தற்போது உயர் ரத்த அழுத்தம் குறைந்து அவருடைய ரத்த அழுத் தம் இயல்பு நிலைக்கு வந்துள்ளது. 16 வயது சிறுமிக்கு முதன்மை ஆஞ் சியோபிளாஸ்டி சிகிச்சை அளிக் கப்பட்டது நாட்டிலேயே இதுதான் முதல்முறை. இதன்மூலம் திருநெல் வேலி அரசு மருத்துவர்கள் வரலாற்றுச் சிறப்புமிக்க சாதனையை படைத்துள்ளனர். இந்தச் சிறுமிக்கு இதயவியல் துறைத் தலைவர் தலைமையில் சிகிச்சை அளித்த பேராசிரியர் அருள், மருத்துவர்கள் மணிகண்டன்,முகமது ரபீக், சரவணன், செல் வகுமரன், ஆன்டோ, திரிலோகசுந்தர், விஸ்வநாதன் ஆகியோர் அடங்கிய மருத்துவர்களுக்குப் பாராட்டுகள். இவ்வாறு அவர் தெரிவித்தார். .