districts

img

வணிகமயமாகிப் போன கல்வி; அவுட்சோர்சிங் முறைக்குச் செல்லும் அரசுத்துறைகள் நீதிபதி ஹரிபரந்தாமன் வேதனை

மதுரை, அக்.2- மக்கள் கல்வி கூட்டியக்கம் சார்பில் மதுரையில் கோரிக்கை மாநாடு ஞாயிறன்று நடைபெற்றது. மாநில ஒருங்கிணைப்பாளர் கண.குறிஞ்சி தலைமையில் நடைபெற்ற மாநாட்டை ஓய்வுபெற்ற நீதிபதி ஹரிபரந்தா மன் துவக்கி வைத்தார். அவர் பேசுகையில், “இந்தியாவில் கல்வி வணிக மயமாகிவிட்டது. பொதுத்துறை நிறுவனங்களி லிருந்து அரசு மெல்ல மெல்ல விலகி அவுட்சோர்சிங் மயமாக்கி வருகிறது. மேலைநாடுகளில் கல்வி அரசின் கட்டுப்பாட்டில் உள்ளது. இந்தியாவில் கல்வி பெயரளவில் மட்டுமே அரசின் கட்டுப்பாட்டில் உள்ளது. அரசியலமைப்புச் சட்டம் உருவாக்கப்பட்டபோது அம்பேத்கரைத் தவிர மற்றவர்கள் உயர்சாதியினராக இருந்ததால் கல்வி உயர்சாதியினருக்கு மட்டும்தான் என்ற உள் நோக்கத்தோடு வரையறுக்கப்பட்டுள்ளது. அரசியலமைப்புச் சட்டத்தில் கல்வி அடிப்படை உரிமை இல்லை. ஆனால் கல்வி நிலையங்களை ஏற்படுத்து வது அடிப்படை உரிமையாக உள்ளது. ஒன்றிய, மாநில அரசுகளின் கட்டுப்பாட்டில் கல்வி பெயரளவிற்கே உள்ளது.  தனியார்-மற்றும் கார்ப்பரேட் நிறுவனங்களின் கட்டுப்பாட்டில் கல்வி உள்ளதால் அது வணிகமய மாகிவிட்டது. பணியாற்றும் ஆசிரியர்கள் கொத்தடிமை கள் போல் உள்ளனர்.  அனைத்துத் துறைகளும் கொஞ்சம் கொஞ்சமாக அரசின் கட்டுப்பாட்டிலிருந்து விலகுகின்றன. ‘அவுட்சோர்சிங்’ முறையில் தனியார்மயமாகி வரு கிறது. ஒன்றிய, மாநில அரசுத்துறைகளில் 90 சதவீதம் ஒப்பந்தமுறைக்கு மாறிவருகிறது. ரயில்வேயில் 18 லட்சம் தொழிலாளர்கள் இருந்தால் ஏழு லட்சம் தொழி லாளர்கள் ஒப்பந்தத் தொழிலாளர்களாக உள்ளனர்.  தனியார்மயமே சிறந்தது என்ற கருத்தை உளவியல் ரீதியாக நம்மீது திணிக்கிறார்கள். உரிமைகளைப் போராடித்தான் பெற வேண்டும். அதற்கு சங்கங்கள், அமைப்பு ரீதியாக ஒன்றிணைய வேண்டும். தமிழ கத்தில் பெரும்பாலும் ஏரிகள், குளங்களை ஆக்கிர மித்தே தனியார் கல்வி நிறுவனங்கள் ஏற்படுத்தப் பட்டுள்ளது.  தனியார் கல்வி நிறுவனங்கள் தொழிற்சாலைகளுக்கு நிகராக மாறிவிட்டதால், அவற்றை அரசால் கட்டுப் படுத்த முடியாமல் போய்விட்டது. இவ்வாறு அவர் கூறினார்.