திருச்சி விமான நிலையத்தில் ரூ.25 லட்சம் தங்கம் பிடிபட்டது
திருச்சிராப்பள்ளி, மார்ச் 5 - சார்ஜாவிலிருந்து திங்களன்று திருச்சிக்கு விமானம் ஒன்று வந்தது. இதில் வந்திறங்கிய பய ணிகளை இமிகிரேசன் அதி காரிகள் சோதனை செய்த னர். அப்போது ஆண் பயணி ஒருவரின் ஜீன்ஸ் பேண்டை அதிகாரிகள் சோதனை செய்த போது, அதில் 390 கிராம் தங் கத்தை கடத்தி வந்தது தெரிய வந்தது. இவற்றின் மதிப்பு ரூ.24.96 லட்சம். இதையடுத்து இமி கிரேசன் அதிகாரிகள் கடத் தல் தங்கத்தை பறி முதல் செய்து, அந்த பயணி யிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
வழக்குரைஞர்கள் ஆர்ப்பாட்டம்
அரியலூர், மார்ச் 5 - உயர்நீதிமன்றத்தில் வழக்காடு மொழியாக தமிழை அறிவிக்க வலியு றுத்தி அரியலூர் ஒருங் கிணைந்த நீதிமன்ற வளா கம் முன்பு மாவட்ட வழக்கு ரைஞர்கள் சங்கத்தினர் செவ்வாய்க்கிழமை ஆர்ப் பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்துக்கு, அச்சங் கத்தின் மாவட்டத் தலைவர் மனோகரன் தலைமை வகித்தார். இணைத் தலை வர் கதிரவன், செயலர் முத்துக்குமரன், அரசு வழக் குரைஞர்கள் செல்ல.சுகுமார், கதிரவன், ராஜா உள்ளிட்டோர் கோரிக் கையை வலியுறுத்தி முழக்கமிட்டனர்.
மார்ச் 8-இல் படைவீரர் குறைதீர் கூட்டம்
தஞ்சாவூர், மார்ச் 5- தஞ்சாவூர் மாவட்டத் தில் உள்ள முன்னாள் படை வீரர்கள் மற்றும் அவர் களைச் சார்ந்தோர்களுக் கான சிறப்பு குறைதீர்க்கும் கூட்டம், மார்ச் 8 அன்று காலை 10 மணியளவில், மாவட்ட ஆட்சியர் தீபக் ஜேக்கப் தலைமையில், மாவட்ட ஆட்சியர் அலுவ லக வளாகத்தில் உள்ள பொதுமக்கள் குறை தீர்க்கும் கூட்ட அரங்கில் நடைபெறவுள்ளது. இக்கூட்டத்தில் முன் னாள் படைவீரர்கள் மற்றும் அவர்களைச் சார்ந்தோர் கள் தங்களது குறைகளை மனுவாக அளிக்கலாம். அவ்வாறு மனு அளிக்கக்கூடிய முன்னாள் படைவீரர் மற்றும் அவரை சார்ந்தோர் கள் இரண்டு பிரதிகளில் மனுக்களை தங்கள் அடையாள அட்டையுடன் இணைத்து அளிக்க வேண்டும் என தெரிவிக்கப் பட்டுள்ளது.
டாஸ்மாக் கடையில் மதுபானம் திருட்டு
அரியலூர், மார்ச் 5- அரியலூர் திருமா னூர் அருகேயுள்ள கீழக் காவட்டாங்குறிச்சி கிராமத் தில் இயங்கி வரும் டாஸ்மாக் கடையில் திங்கள் கிழமை இரவு 10 மணிக்கு விற்பனை முடித்துவிட்டு, அதன் விற்பனையாளர் சிவகுமார் பூட்டிச் சென்றார். இந்நிலையில், செவ்வாயன்று காலை அப்பகுதி மக்கள் பார்த்த போது, கடையின் பூட்டு மற்றும் கண்காணிப்பு கேமரா ஆகியவை உடைக் கப்பட்டு உள்ளே இருந்த மதுபானங்கள் திருடு போயிருப்பது தெரிய வந்தது. இதுகுறித்து தகவ லறிந்து சென்ற திருமா னூர் காவல்துறையினர் சம்பவ இடத்தை ஆய்வு செய்து, வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மாணவிக்கு பாலியல் வன்கொடுமை: ஆசிரியருக்கு 20 ஆண்டுகள் சிறை
புதுக்கோட்டை, மார்ச் 5 - புதுக்கோட்டை கூடல் நகரைச் சேர்ந்த வர் வென்ஷீலிக் இஸ்ரேல் பிண்டு(31). இவர் புதுக்கோட்டையிலுள்ள தனியார் மெட்ரிக் பள்ளியில் 2022 இல் ஆசிரியராகப் பணிபுரிந்த போது, வீட்டில் தனியே தனிப்பயிற்சி (டியூ சன்) நடத்தி வந்துள்ளார். அப்போது, 10 ஆம் வகுப்பு படித்து வந்த மாணவி ஒருவரை, வீட்டில் வைத்து பலமுறை பாலியல் வன் கொடுமை செய்துள்ளார். இதுகுறித்து அளிக்கப்பட்ட புகாரின் பேரில், வழக்குப் பதிந்த புதுக்கோட்டை நகர அனைத்து மகளிர் காவல் நிலைய போலீ சார், வென்ஷீலிக் இஸ்ரேல் பிண்டுவைக் கைது செய்தனர். இந்த வழக்கு புதுக்கோட்டை மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கு விசாரணையின் முடிவில் நீதிபதி எஸ். ஜெயந்தி திங்கள்கிழமை தீர்ப்பு வழங்கினார். அதில், பாலியல் வன்கொடுமை செய்த குற்றத்துக்காக 20 ஆண்டுகள் கடுங்கா வல் சிறைத் தண்டனையும், ரூ.25 ஆயிரம் அபராதமும், குற்றத்தை வெளியே சொல்லக் கூடாது என மிரட்டிய குற்றத்துக்காக ஓராண்டு சிறைத் தண்டனையும் விதிக்கப் பட்டது.
இடைநிலை ஆசிரியர்கள் போராட்டம்
அரியலூர், மார்ச் 5 - சம வேலைக்கு சம ஊதியம் கேட்டு அரியலூர் அண்ணாசிலை அருகே இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர்கள் இயக்கத்தினர் 16 ஆவது நாளாக பணியை புறக்கணித்து செவ்வா யன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடு பட்டனர். இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர்கள் இயக்கத் தின் அரியலூர் ஒன்றிய ஒருங் கிணைப்பாளர் இனிய வெங்கட் தலைமை வகித்தார்.
ஓடும் பேருந்தில் நகை திருட்டு
திருச்சிராப்பள்ளி, மார்ச் 5 - திருச்சியை அடுத்த சமயபுரம் அருகே ஈஞ்சூர் குடி தெருவைச் சேர்ந்தவர் முருகேசன். இவரது மனைவி அங்கு ரத்தினம் (70). இவர், சம்பவத்தன்று குளித்தலையில் உள்ள உறவினர் வீட்டு திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற் காக சமயபுரம் அருகே உள்ள பள்ளிவிடை பேருந்து நிலை யத்திலிருந்து, சத்திரம் பேருந்து நிலையம் செல்வதற்கு அரசுப் பேருந்தில் ஏறி பயணம் செய்தார். பேருந்தில் கூட்டம் அதிகமாக இருந்தது. அங்குரத்தினம் தோளில் போட்டிருந்த பையில், 29.5 பவுன் தங்க நகைகளை வைத்து இருந்த தாக தெரிகிறது. இந்நிலையில், திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் வந்தவுடன் பேருந்திலிருந்து அங்குரத்தி னம் கீழே இறங்கினார். அப்போது பையில் இருந்த தங்க நகையை சோதனை செய்த போது, பையில் இருந்த 29.5 பவுன் நகை திருடு போய் இருப்பது கண்டு அதிர்ச்சியடைந் தார். இச்சம்பவம் குறித்துகோட்டை போலீசார் வழக்குப் பதிந்து நகையை திருடியவரை தேடி வருகின்றனர்.
நரிகட்டியூர் அரசுப் பள்ளியில் ஒரே நாளில் 75 மாணவர்கள் சேர்க்கை
கரூர், மார்ச் 5 - கரூர் மாவட்டம் நரிக் கட்டியூரில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி யில் ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் தற்போது 417 மாணவ, மாணவிகள் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை படித்து வரு கின்றனர். தமிழக அரசு தற்போது 2024-2025 ஆம் கல்வி ஆண்டுக்கான மாண வர் சேர்க்கையை மார்ச் ஒன்றாம் தேதி முதல் துவங்க உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில், நரிகட்டி யூர் ஊராட்சி ஒன்றிய அரசு தொடக்கப் பள்ளியில் மார்ச் ஒன்றாம் தேதி நடைபெற்ற மாணவர் சேர்க்கையில், ஒரே நாளில் ஒன்றாம் வகுப் பில் 65 மாணவ-மாணவி களும், 2 முதல் 5 ஆம் வகுப்பு வரை 10 மாணவ- மாணவிகளும் சேர்ந்துள்ள னர். கரூர் மாவட்டத்தில் செயல்படும் சிறந்த பள்ளிகளில் இப்பள்ளியும் ஒன்று. எனவே பெற்றோர் ஆர்வமுடன் இப்பள்ளியில் தங்களது குழந்தைகளை சேர்த்து வருகின்றனர். மேலும் மாணவ, மாணவி களை அதிகளவில் பள்ளி யில் சேர்ப்பதற்கு ஆசிரியர் கள் பெரும் முயற்சி மேற் கொண்டு வருகின்றனர் என்று பள்ளி தலைமை ஆசிரி யர் விஜயலலிதா தெரிவித் தார்.
அரியலூர் ஊராட்சி ஒன்றியக் குழு வடிகால் வசதி செய்திட முடிவு
அரியலூர், மார்ச் 5- அரியலூர் ஊராட்சி ஒன்றியக் குழு கூட்டம் அலுவலகக் கூட்டரங்கில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு, ஒன்றியக் குழுத் தலைவர் செந்தமிழ் செல்வி தலைமை வகித்தார். எருத்துக்காரன்பட்டி ஊராட்சி, கருப்பையா கோயில் எதிர்ப்புறம் சிமெண்ட் சாலை அமைத்தல், இலுப்பையூர், பொய்யாதநல்லூர் ஆகிய ஊராட்சிகளிலுள்ள காலனியில் சிமெண்ட் சாலை, காந்தி நகர் சாலையில் இருபுறமும் வடிகால் வசதிகள், தாமரைக்குளம் ஊராட்சி ஆசாரி தெரு வில் சிமெண்ட் சாலை, காவனூர் ஊராட்சி கா.அம்பாபூர், விளாங்குடி ஊராட்சி சிந்தாமணி ஆகிய ஊர்களில் மின் மோட்டார் அறைகள் அமைத்தல் உள்ளிட்ட 21 தீர்மா னங்கள் நிறைவேற்றப்பட்டன.
கோவிலூர் ஜல்லிக்கட்டில் 49 பேர் காயம்
புதுக்கோட்டை, மார்ச் 5- புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே கோவிலூரில் நடந்த ஜல்லிக்கட்டு போட்டியில் 49 பேர் காயம் அடைந்தனர். புதுக்கோட்டை மாவட்டம், கோவிலூர் முத்துமாரியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியை சட்டத்துறை அமைச் சர் எஸ்.ரகுபதி, சுற்றுச்சூழல்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் ஆகியோர் கொடிய சைத்து தொடக்கி வைத்தனர். கோட்டாட்சி யர் ஐஸ்வர்யா, ஒன்றியக்குழுத் தலைவர் வள்ளியம்மை தங்கமணி உள்ளிட்டோர் பங்கேற்றனர். புதுக்கோட்டை, தஞ்சாவூர், சிவ கங்கை, மதுரை, திண்டுக்கல், திருச்சி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலிருந்து 610 காளைகள் வாடிவாசலில் இருந்து அவிழ்த்து விடப்பட்டன. 350 மாடுபிடி வீரர்கள் பங்கேற்றனர். இந்த போட்டியில் கலந்து கொண்ட வீரர்கள் மற்றும் காளைகள் முழு மருத்துவப் பரிசோதனைக்கு பிறகே அனு மதிக்கப்பட்டனர். வாடிவாசலில் இருந்து அவிழ்த்து விடப்பட்ட காளைகளை அடக்க முயன்ற வீரர்கள் மற்றும் பார்வையாளர்கள் என 49 பேர் காயமடைந்தனர். இவர்கள் சிகிச்சைக் காக, ஆலங்குடி அரசு மருத்துவமனை மற்றும் புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு 108 மூலம் அனுப்பி வைக்கப்பட்டனர். வெற்றிபெற்ற காளைகளுக்கும், மாடுபிடி வீரர்களுக்கும் பரிசுப் பொருட்கள் வழங்கப்பட்டன.
பொதுக் கழிப்பிடங்களை புனரமைக்க பேரூராட்சி முடிவு
பாபநாசம், மார்ச் 5 - தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் பேரூராட்சி மன்றக் கூட்டம் பேரூராட்சி மன்றத் தலைவர் பூங்குழலி தலைமை யில் நடைபெற்றது. பாபநாசம் பேரூராட்சியில் 15 ஆவது நிதிக்குழு மானியம் டைய்டு-அன்டைய்டு திட்டத்தின்கீழ் பாபநாசம் பேருந்து நிலையத்தில் பொதுக் கழிப்பிடம் புனர மைத்தல், குப்பைமேடு ஆதிதிராவிடர் தெரு பொதுக் கழிப்பிடம் புனரமைத்தல், பாபநாசம் பேரூராட்சி பொது நிதி திட்டத்தின் கீழ் அந்தோணியார் கோயில் தெரு ரிவிட்மென்ட் சாலை அமைக்கும் பணி, கஞ்சிமேடு காளி யம்மன் கோயில் தெரு மயான சாலை அமைக்கும் பணி, கீழகுடியானத் தெருவில் குறுக்கு சாலை அமைக்கும் பணி, பாபநாசம் பேரூராட்சி 6 வது நிதிக் குழு 2023- 2024 திட்டத்தின் கீழ் திருப்பாலைத் துறை அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி கழிப்பிடம் பராமரித்தல் பணி ஆகியவற்றை மேற்கொள்வது. அன்டைய்டு மானிய திட்டத்தின்கீழ் கஞ்சிமேடு பகுதியில் கல்வெட்டு அமைக்கும் பணி, செங்குந்தர் தெரு பகுதியில் கல்வெட்டு அமைக்கும் பணி, தெற்கு மட விளாகம் தார்ச்சாலை அமைக்கும் பணி, பேஷ்வா அக்ர ஹார பகுதியில் கல்வெட்டு அமைக்கும் பணி ஆக மொத்தம் ரூ.84 லட்சத்தில் வளர்ச்சி திட்டப் பணிகளை மேற்கொள்வது என தீர்மானிக்கப்பட்டது. இதில் பாப நாசம் பேரூராட்சி கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர்.
பேராவூரணியில் வளர்ச்சி திட்டப் பணிகள் தொடக்கி வைப்பு
தஞ்சாவூர், மார்ச் 5- தமிழ்நாடு அரசு நீர்வளத்துறை சார்பில், தூர்வாரும் திட்டப் பணிகள், தஞ்சை மாவட்டம், பேராவூரணி வட்டம் நெல்லியடிக்காடு மற்றும் ஆதனூர் கிராமத்தில் அம்புலி யாறு வடிகால் தொலைக்கல் 38.00 கிலோமீட்டர் முதல் 38.70 கிலோ மீட்டர் வரை தூர்வாரும் பணி ரூ.23 லட்சத் தில் நடைபெறுகிறது. இதேபோல், நீர்வள ஆதாரத்துறை அக்கினியாறு வடிநிலக் கோட்டத்தில், பேராவூரணி வட்டம் குருவிக் கரம்பை கிராமத்தில் தேனங்காடு ஏரிக்கு நீர் வழங்கு வதற்கு கல்லுக்குளம் வாரியின் குறுக்கே, ரூ.3.35 கோடி மதிப்பீட்டில் அணைக்கட்டு கட்டும் பணி நடைபெறு கிறது. சேதுபாவாசத்திரம் ஒன்றியம், அழகியநாயகிபுரம் ஊராட்சி, கரிசவயலில் அரசு மேல்நிலைப் பள்ளிக்கு தார்ச் சாலை அமைக்கும் பணி, கொள்ளுக்காடு ஊராட்சி, நாடார் தெரு, மாரிக்குறிச்சி அம்மன் கோவிலில் மேல்நிலை நீர்தேக்கத் தொட்டி அமைக்கும் பணி, இரண்டாம்புளிக் காடு ஊராட்சி, காத்தாயி அம்மன் கோவில் விழா மேடை அமைக்கும் பணி என மொத்தம் ரூ.3.78 கோடி மதிப்பீட்டி லான வளர்ச்சித் திட்ட பணிகளை பேராவூரணி சட்ட மன்ற உறுப்பினர் நா.அசோக்குமார் தலைமை வகித்து அடிக்கல் நாட்டி தொடக்கி வைத்தார்.
கும்பகோணம்: 20 ஊராட்சிகளில் ரூ.1.65 கோடியில் வளர்ச்சிப் பணிகள்
கும்பகோணம், மார்ச் 5- கும்பகோணத்தில் 20 ஊராட்சிகளில் ரூ.1.65 கோடி யில் வளர்ச்சி பணிகள் நடைபெற்றுள்ளதாக ஒன்றியக் குழு தலைவர் தெரிவித்தார். தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணத்தில் ஊராட்சி ஒன்றியக் குழு கூட்டம் தலைவர் காயத்ரி அசோக்குமார் தலைமையில் நடைபெற்றது. இதில் வட்டார வளர்ச்சி ஆணையர் ஆனந்தராஜ், வட்டார வளர்ச்சி அலுவலர் ராஜ ரத்தினம் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர். கும்பகோணம் மாநகராட்சியில் உள்ள 20 ஊராட்சி களில் அடிப்படை வசதியான சாலை வசதி, குடிநீர் வசதி உள்ளிட்ட பணிகள் ரூ.1 கோடியே 65 லட்சம் மதிப்பீட்டில் தொடங்கப்பட்டதாக ஒன்றியக் குழு தலைவர் காயத்ரி அசோக்குமார் தெரிவித்தார். கூட்டத்தில், 11 ஒன்றியக் குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். முன்னதாக தமிழக இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை அதிகரிக்கவும், தமிழகத்தில் தொழில் வளர்ச்சி பெறவும் ஸ்பெயின் நாட்டிற்குச் சென்று முதலீடு ஈட்ட ஆவன செய்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவிப்பது உள்ளிட்ட 27 தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன.
இலவச கண் பரிசோதனை முகாம்
பாபநாசம், மார்ச் 5 - தஞ்சாவூர் மாவட்ட பார்வை இழப்பு தடுப்புச் சங்கம், மேம்படுத்தப்பட்ட கபிஸ்தலம் அரசு ஆரம்ப சுகாதார நிலையம், பாபநாசம் விவேகானந்தா சமூக கல்விச் சங்கம் இணைந்து இலவச கண் பரிசோதனை முகாமை பாபநாசம் விவேகானந்தா சமூகத் தொண்டு நிறுவன வளாகத்தில் நடத்தின. இதில் கபிஸ்தலம் வட்டார மருத்துவ அலுவலர் தீபக், பாபநாசம் விவேகானந்தா சமூக கல்விச் சங்கத் தலைவர் தேவராஜ், செயலர் கண்ணதாசன், நிர்வாக உறுப்பி னர் சிவக்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர். நூறு பேருக்கு பரிசோதனை மேற்கொண்டதில், 12 பேருக்கு கண்ணில் புரை இருப்பது கண்டறியப்பட்டது. இவர்களுக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ள, தஞ்சாவூர் மண்டல கண் ஆராய்ச்சி மையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
அரசுப் பள்ளியில் மாணவர் சேர்க்கை விழிப்புணர்வு பேரணி
தஞ்சாவூர், மார்ச் 5- தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி பேரூராட்சி நாட்டா ணிக்கோட்டை வடக்கு ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி யில் மாணவர் சேர்க்கை பேரணி பள்ளி தலைமை ஆசிரி யர் நிர்மலா தலைமையில் திங்கள்கிழமை நடை பெற்றது. பேரணியை வட்டார வளமய மேற்பார்வையாளர் அ. முருகேசன், ஆசிரியர் பயிற்றுநர் சரவணன் ஆகியோர் துவக்கி வைத்தனர். பேரணியில், பள்ளி மாணவர் சேர்க்கை தொடர்பான விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தி, மாணவர்கள் சென்றனர். இப்பேரணியானது, நகரின் முக்கிய வீதிகள் வழியாக பேரணி சென்று மீண்டும் பள்ளி வளாகத்தில் நிறைவடைந்தது. பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் வீராசாமி, பள்ளி மேலாண்மை குழு தலைவி பார்கவி, பள்ளி ஆசிரி யர்கள், பெற்றோர் ஆசிரியர் கழகத்தினர், பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள், கிராம பொது மக்கள் கலந்து கொண்டனர்.