தஞ்சாவூர், டிச.26 - தஞ்சை எலிசா நகர் இசிஐ தேவால யத்தில் கிறிஸ்துவ நல்லெண்ண இயக்கம், தஞ்சை மத்திய மாவட்டம் தமிழ்நாடு சிறு பான்மை மக்கள் நலக் குழு, தஞ்சாவூர் வசந்தம் லயன்ஸ் சங்கம், தஞ்சாவூர் மாவட்ட வணிகர் சங்க பேரவை ஆகியோர் இணைந்து மத நல்லிணக்க கிறிஸ்துமஸ் விழாவை தஞ்சையில் புதன்கிழமை நடத்தினர். விழாவிற்கு, தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக் குழு தஞ்சாவூர் மாநகரத் தலை வர் அப்துல் நசீர் தலைமை வகித்தார். கிறிஸ்துவ நல்லெண்ண இயக்க மாவட்டத் தலைவரும் எலிசா நகர் பேராய கமிசரியு மான டாக்டர் எம்.சூசைபால் அடிகளார் வர வேற்றார். கத்தோலிக்க திருச்சபை மீட்பு பணிகள் நிலைய இயக்குநர் அருட்திரு ஜான் கென்னடி அடிகளார், எஸ்.எம்.கென்னடி மோசஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கந்தர்வகோட்டை தொகுதி சட்டமன்ற உறுப்பினர் எம்.சின்னதுரை சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார். கிறிஸ்துவ நல்லெண்ண இயக்கம் மாநில செயற்குழு உறுப்பினர் பிரான்சிஸ் நன்றி கூறினார்.