மயிலாடுதுறை, மே 30-
தில்லியில் நீதி கேட்டு போராடி வரும் தேசிய மல்யுத்த வீராங்கனைகள் மீது ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும் தில்லி காவல்துறை காட்டுமிராண்டித் தனமாக தாக்குதல் நடத்தி கைது செய்ததை கண்டித்து மயிலாடு துறை கிட்டப்பா அங்காடி முன்பு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. மாவட்டத் தலைவர் ஐயப்பன் தலைமை வகித் தார். மாவட்டச் செயலாளர் அறிவழகன், ஒன்றியச் செய லாளர் குமரேசன், மாவட்ட நிர்வாகிகள் பவுல் சத்திய ராஜ், சபீர் அஹமது, கபிலன் உள்ளிட்டோர் உரையாற்றி னர்.