நாகப்பட்டினம், ஆக.8 -
வண்டலூர் ஊராட்சியில் சாலை வசதி செய்து தரக் கோரி நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளூர் வடக்கு ஒன்றியம் சார்பில் உண்ணாவிரதப் போராட்டம் நடை பெற்றது.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வண்டலூர் கிளைச் செயலாளர் டி.பக்கிரிசாமி தலைமை வகித்தார். நாகை மாவட்டச் செயலாளர் வி.மாரிமுத்து கண்டன உரையாற்றி னார். கீழ்வேளூர் வடக்கு ஒன்றியச் செயலாளர் என்.எம். அபுபக்கர் மற்றும் ஒன்றிய குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். மாரியம்மன் கோவில் சாலையை தார்ச்சாலையாக மாற்ற வேண்டும். மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை சுத்தம் செய்து பராமரிக்கப்பட்ட குடிநீர் வழங்க வேண்டும்.
ஊராட்சி மன்றத் தலைவர் ஊராட்சியில் தங்கி மக்கள் பணியாற்றிட வேண்டும். வாரத்தில் அனைத்து நாட்களும் நியாய விலைக் கடை திறக்கப்பட வேண்டும். இரவு நேர சிரமத்தை தவிர்க்க, தெருவிளக்குகளை பரா மரிக்க கொள்ள வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலி யுறுத்தப்பட்டன.