districts

கோயில் பாதுகாப்பு, குடமுழுக்கிற்கான பணம் முறையாக செலவிடப்படுகிறதா முன்னாள் ஐ.ஜி. பொன்மாணிக்கவேல் கேள்வி

கும்பகோணம், ஜூலை 21 -

    கோயில் பாதுகாப்பு, குடமுழுக்கிற் காக ஒதுக்கப்படும் பணம் முறையாக செலவிடப்படுகிறதா? என்று சிலை கடத்தல் தடுப்பு பிரிவு முன்னாள் ஐ.ஜி.  பொன்மாணிக்கவேல் கேள்வி எழுப்பி யுள்ளார்.

   சிலை கடத்தல் தடுப்பு பிரிவு முன்னாள் ஐ.ஜி. பொன்மாணிக்கவேல் கும்பகோணத்தில் உள்ள கோயில் களில் தரிசனம் செய்ய வந்தார். அப்போது அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

   கோயில்களை புதுப்பிக்கவும், புனரமைக்கவும், பாதுகாக்கவும், திருப் பணி செய்யவும் கோவில் சொத்துகள்  மூலமும், பல்வேறு வரவினங்கள் மூல மும் கோயில்களில் கோடிக்கணக்கான ரூபாய் சேமிப்பாக உள்ளது. இந்த புரா தன கோயில்களின் சொத்துகளை சரி யாக நிர்வகிக்க வேண்டும். அறநிலையத் துறையைப் பற்றி தெரியாதவர்கள், இத்துறையின் உயர் பதவிக்கு வந்து விடுகிறார்கள்.

   கோயில்களைப் பணரீதியாக வகைப்படுத்துவதையும், வருமானத் தின் அடிப்படையில் கோயில்களைப் பிரிப்பதையும் அரசு கைவிட வேண்டும்.  இது ஒரு அபாயகரமான செயல். 1959-ல் கொண்டு வரப்பட்ட அரசியல்  அமைப்பு சட்டம், கோயில் நிர்வா கத்தை சர்வாதிகார அடிப்படையில் நடத்துவதாக அமைந்துள்ளது.

   உரிமை யாளரையே பணியாளராக ஆக்கியுள் ளது. கோயில்களை வகைப்படுத்துவ தாக இருந்தால், அதன் தொன்மைத் தன்மை அடிப்படையில் வகைப்படுத்த வேண்டும். இதற்கு நம்மிடம் வரலாறு உள்ளது. தமிழக அரசின் அறநிலையத்துறை புனரமைப்பு, பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்கு பல கோடி ரூபாய் ஒதுக்குகிறது. இந்த தொகை முறையாக செலவு செய்யப்படுகிறதா? என அரசு கண்காணிப்பதில்லை.

   சேர, சோழ, பாண்டியர்கள் காலம், விஜயநகர பேரரசு காலம், இயேசு கிறிஸ்து காலம், அதற்கு முந்தைய காலம் என வயதின் அடிப்படையில் கோயில்களை வகைப்படுத்தி எந்த கோயில் பழமையானதோ, அதை முதலில் புதுப்பித்து குடமுழுக்கு நடத்த வேண்டும்.

     அதற்கு அடுத்து, படிப்படியாக வயதின் அடிப்படையில் கோயில்களை புனரமைப்பு செய்து குட முழுக்கு நடத்த வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் கிட்டத்தட்ட 10, 20 ஆ ண்டுகளில் எல்லா கோயில்களையும்  புனரமைப்பு செய்து குடமுழுக்கு நடத்த  முடியும்.

    தற்போது பணத்துக்காகவும், ஊழல் செய்யவும் கோயில்களில் குட முழுக்கு நடத்துவது வழக்கமாக இருந்து வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.