districts

சிறு, குறு விவசாயிகளுக்கு மானியத்தில் நுண்ணீர் பாசன வசதி

தஞ்சாவூர், மே 10-  

     தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை வட்டார வேளா ண்மை உதவி இயக்குநர் ச.மாலதி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ‘‘பாசன நீரை சிக்கனமாகவும் பயி ருக்கு தேவையான அளவும் பயன்படுத்த உதவும் சொட்டு நீர் பாசனம் மற்றும் தெளிப்பு நீர் பாசனம் பெற விரும்பும் விவசாயிகள் பிரதான் மந்திரி கிரிஷி சிஞ்சாய் யோஜனா  திட்டத்தின் கீழ் சிறு, குறு விவசாயிகளாக இருந்தால் அரசு வழிகாட்டு நெறிமுறைகளுக்கு உட்பட்டு இருந்தால்  100 விழுக்காடு மானியத்திலும் இதர விவசாயிகள் 75 விழுக்காடு மானியத்திலும் பயன்பெறலாம்.  

    இத்திட்டத்தில் பயன்பெற ஆதார் நகல், குடும்ப அட்டை நகல், கணினி சிட்டா, அடங்கல், சிறுகுறு விவசாயி யாக இருந்தால் சிறுகுறு விவசாயி சான்று போன்ற ஆவ ணங்களை மே 12-க்குள் சம்பந்தப்பட்ட உதவி  வேளாண்மை அலுவலரிடம் கொடுத்து பெற்றுக்கொள்ள லாம்’’ என தெரிவித்துள்ளார்.