districts

img

அமராவதி அணை நீர்மட்டம் வேகமாக உயர்வு: ஆற்றின் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

உடுமலை, அக்.21- அமராவதி அணையின் நீர்பிடிப்புப் பகுதி களில் கடந்த சில நாட்களாக  மழை பெய்வ தால் அணையின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது. இதனால் ஆற்றின் கரை யோரப் பகுதிகளில் உள்ள பொதுமக்கள் எச்ச ரிக்கையாக இருக்குமாறு பொதுப்பணித் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். திருப்பூர் மாவட்டம், உடுமலையில் உள்ள அமராவதி அணையின் மூலம் திருப் பூர் மற்றும் கரூர் மாவட்டங்களில் பழைய ஆயக்கட்டு மற்றும் புதிய ஆயக்கட்டு என  சுமார் 54,634 ஏக்கர் விவசாய நிலங்கள் பயன்  பெறுகிறது. மேலும், ஆயிரக்கணக்கான கிர மாங்களுக்கு குடிநீர் ஆதாரமாக விளக்குகி றது. இந்நிலையில், மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் பெய்த மழையால் அணையின் நீர்மட்டம் வெகுவாக உயர்ந்த துள்ளது. அணையின் மொத்த கொள்ளவு 90  அடி தற்பொழுது 85.47 அடியாக உள்ளது. அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 748 கன அடி  நீர் வருகிறது. மேலும் அணையின் நீர்ப்பி டிப்பு பகுதியில் தொடர்ச்சியாக மழை பெய்து  வருவதால், அணையில் இருந்து உபரிநீர்  திறந்துவிட வாய்ப்புள்ளது. எனவே வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.  இது குறித்து பொதுப்பணித்துறை அதிகா ரிகள் தெரிவிக்கையில், அமராவதி அணைக்கு வரும் தண்ணீரை தொடர்ச்சியாக  கண்காணித்து வருகிறோம். அணையின் நீர் மட்டம்  உயரும் போது அணையின் பாதுகாப் புக் கருதி உபரி நீர் வெளியேற்ற நடவடிக்கை  எடுக்கப்படும் என்றனர். திருமூர்த்தி மலையில்  வெள்ளப்பெருக்கு: திருமூர்த்தி மலை பகுதியில் ஞாயிற்றுக் கிழமை இரவு பெய்த கனமழையால் பஞ்ச லிங்க அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட் டது. மேலும், அடிவாரப் பகுதியில் இருக்கும்  கோவிலை வெள்ள நீர் சூழ்ந்துள்ளது. திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே உள்ள திருமூர்த்தி மலை பகுதியில் பெய்த  கனமழையால் திங்கட்கிழமை பஞ்சலிங்க  அருவி மற்றும் அடிவார கோவிலுக்கு செல்ல  அனுமதி இல்லை என நிர்வாகத்தினர் தெரி வித்துள்ளனர். இந்நிலையில்  கோவில் பகுதி யில் இருக்கும் ஆற்றில் திடீர் வெள்ளப்பெ ருக்கு ஏற்பட்டதால் கோவிலை சுற்றி தண்ணீர்  சூழ்ந்துள்ளது.