மயிலாடுதுறை, ஆக.14 -
மயிலாடுதுறை மாவட்டம், பொறையார் அருகேயுள்ள ஆயப்பாடியில் தீ விபத்தால் பாதிக்கப்பட்ட குடும்பத்தின ருக்கு எம்எல்ஏ நிவேதா முருகன் நிவாரண உதவிகளை வழங்கினார்.
திருக்களாச்சேரி ஊராட்சி ஆயப்பாடி காளியம்மன் கோவில் தெருவில் வசித்து வருபவர் சரோஜா (65). இவரது கூரை வீடு சனிக்கிழமை திடீரென ஏற்பட்ட தீவிபத்தில் எரிந்து சேதமடைந்தது. இத்தகவல் அறிந்த பூம்புகார் தொகுதி சட்டப் பேரவை உறுப்பினர் நிவேதா எம்.முருகன் நேரில் சென்று தீ விபத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறினார். மேலும், ரூ.5 ஆயிரம் ரொக்கம், மளிகை பொருட்கள் வழங்கினார். முன்னதாக அரசின் நிவாரணமாக ரூ.5 ஆயிரம், அரிசி உள்ளிட்ட நிவாரண பொருட்களை வட்டாட்சியர் சர வணன் வழங்கினார்.