districts

img

கிராம மக்களின் வாழ்நிலை குறித்து மாணவிகளின் கள ஆய்வறிக்கை

மதுரை, அக்.28- மதுரை லேடிடோக் கல்லூரியின் லைப் ஃபிரான்டியர் என்கேஜ்மெண்ட் மையத்தின் சார்பில் இக்கல்லூரியின் பல்வேறு துறைகளைச் சேர்ந்த மாணவிகள் மதுரை மாவட்டத்தில் உள்ள துவரிமான்,வீரபாண்டி, மாலைப்பட்டி, அரிட்டாபட்டி,சின்னப்பட்டி ஆகிய கிராமங்களில் மக்களின் சமூக, பொருளாதார, சுகாதார நிலை மற்றும் பள்ளி மாணவ, மாணவியர்களின் கல்வி நிலை குறித்து கள ஆய்வு மேற்கொண்டனர். 200-க்கும் மேற்பட்ட மாணவிகள், மக்கள் ,மாணவர்களை சந்தித்துப் பேசி, கேட்டறிந்த தோடு,விழிப்புணர்வு நடவடிக்கைகளையும் மேற்கொண்டனர். இடைநின்ற மாண வர்கள் சிலரிடம் உரையாடி, மீண்டும் பள்ளியில் சேர்த்தனர். கள ஆய்வு மேற் கொண்ட விதம் மற்றும் அதில் கிடைத்த அனுபவங்களை மாணவிகள் விளக்கிப் பேசினர்.  கிராம மேம்பாட்டிற்கான சான்சத் யோஜனா திட்டத்தின் கீழ் நாடாளுமன்ற உறுப்பினர் அலுவலகத்துடன் இணைந்து லைப் ஃபிரான்டியர் என்கேஜ்மெண்ட் திட்ட மாணவிகளின் கள ஆய்வு தொகுக்  கப்பட்ட அறிக்கை அக்டோபர் 27 அன்று வெளியிடப்பட்டது. மதுரை லேடிடோக் கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கள ஆய்வு அறிக்கையை மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் வெளி யிட்டு,உரையாற்றினார்.  கல்லூரி முதல்வர்  கிறிஸ்டியானா சிங் அறிமுக உரையாற்றினார். பேராசிரியைகள் மற்றும் மாணவிகள் பங்கேற்றனர்.