கரூர், ஏப்.27 - கடும் வெயில் தாக்கத்திலிருந்து மாநகராட்சி தூய்மைப் பணியாளர் களை பாதுகாக்க வேண்டுமென ஊரக வளர்ச்சி உள்ளாட்சித்துறை ஊழியர் சங்கம் வலியுறுத்தி உள்ளது. இதுகுறித்து சங்கத்தின் (சிஐடியு) கரூர் மாவட்டத் தலைவர் எம்.சுப்பிர மணியன், மாவட்டச் செயலாளர் சி.முருகேசன் ஆகியோர் தெரிவித்ததா வது: கரூர் மாவட்டத்தில் ஒரு மாநக ராட்சி, 3 நகராட்சி, 8 பேரூராட்சி, 157 ஊராட் சிகள் உள்ளன. இதில் சுமார் 5 ஆயி ரத்திற்கும் மேற்பட்ட தூய்மைப் பணியா ளர்கள் ஒப்பந்தம், நிரந்தரம் அடிப்படை யில் பணிபுரிந்து வருகின்றனர். இப்பணி யில் பெரும்பாலும் பெண்கள்தான் அதிகமாக பணியில் ஈடுபட்டுள்ளனர். இவர்களது பணி நேரம் கரூர் மாநக ராட்சியில் காலை 6 மணி முதல் மதியம் 2 மணி வரையும், நகராட்சி, பேரூராட்சி களில் காலை 6 மணி முதல் 11 மணி வரையும், மீண்டும் மதியம் 2 மணி முதல் மாலை 5 மணி வரையும், ஊராட்சிகளில் காலை 6 மணி முதல் மதியம் 2 மணி மற்றும் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை என உள்ளது. ஆனால் பெரும்பாலும் குறித்த நேரத் தில் பணிகளை முடிப்பது இல்லை. நேரத்திற்கு உணவு உண்ண முடியா மல், ஓய்வு எடுக்க முடியாமல் கூடுதலாக ஒரு மணி நேரம் அல்லது அதற்கும் மேலாக வேலை நேரம் நீட்டிக்கப் பட்டு, கட்டாயப்படுத்தி வேலை வாங்கப் படுகிறது. தற்போது தமிழகம் முழுவதும் கடுமையான வெயில் தாக்கம் உள்ளது. குறிப்பாக கரூர் மாவட்டத்தில் 107 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை உள்ளது. இந்த வெப்ப அலையால் உடல்நிலை பாதிக்கப்படும் அபாயம் உள்ளதாக எச்சரிக்கப்படுகிறது. கரூர் மாவட்ட ஆட்சியர் சமீபத்தில் வெளியிட்ட செய்திக்குறிப்பில், மக்கள் காலை 11 மணி முதல் மாலை 3 மணி வரை வெளி யில் வருவதை தவிர்க்க வேண்டும். வெயிலின் போது கடுமையான பணி களில் ஈடுபட வேண்டாம் என அறிவுறுத் தியுள்ளார். ஆனால் தூய்மை பணியாளர் களுக்கு எவ்வித கருணையும் காட்டா மல், உச்சி வெயில் நேரத்திலும் கட்டாயப் படுத்தி வேலை வாங்குவதை ஊரக வளர்ச்சி உள்ளாட்சித்துறை ஊழியர் சங்கத்தின் கரூர் மாவட்டக் குழு கண்டிக் கிறது. இதனால் தூய்மைப் பணியா ளர்கள் கடும் மன உளைச்சலுக்கும், உடல்நிலை பாதிப்பிற்கும் ஆளாகின்ற னர். எனவே, சம்பந்தப்பட்ட உள்ளாட்சி, ஊராட்சி நிர்வாகங்கள் கடும் வெயில் நேரத்தில் தூய்மைப் பணியாளர்களை பணி செய்ய கட்டாயப்படுத்தாமல், வெயில் தாக்கம் அதிகரிக்கும் நேரத் தில் தூய்மைப் பணியாளர்களை பாது காத்திட மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கரூர் மாவட்ட ஊரக வளர்ச்சி உள்ளாட்சித் துறை ஊழி யர் சங்கத்தின் மாவட்டக் குழு சார்பில் கேட்டுக் கொள்கிறோம். இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ள னர்.