districts

img

தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் டெல்டா மண்டல பயிற்சி முகாம்

மயிலாடுதுறை, அக்.17 - தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் டெல்டா மண்டல பயிற்சி முகாம் மயிலாடுதுறையில் செவ்வாயன்று நடை பெற்றது. வருவாய்த்துறை அலுவலர் சங்க கட்டிடத் தில் நடைபெற்ற முகாமிற்கு  அமைப்பின் மாநிலச் செய லாளர் ஆர்.கலைச்செல்வி தலைமை வகித்தார். “சாதி வெறியைத் தூண்டும் மநுவாதமும்; தீண் டாமை ஒழிப்பு முன்னணி யின் களப்பணியும்” என்ற  தலைப்பில் மாநில துணை  பொதுச் செயலாளர் பா. சுகந்தி கருத்துரையாற்றி னார். மாவட்டச் செயலாளர் எஸ்.இளங்கோவன், தலை வர் சி.மேகநாதன், பொரு ளாளர் ஏ.ஆர்.விஜய் மற்றும்  நிர்வாகிகள் கலந்து கொண்ட னர். இம்முகாமில், திருச்சி (மாநகர், புறநகர்), புதுக் கோட்டை, தஞ்சாவூர், திரு வாரூர், நாகப்பட்டினம், மயி லாடுதுறை, அரியலூர், பெரம்பலூர் ஆகிய மாவட் டங்களைச் சேர்ந்த அமைப் பின் ஊழியர்கள் பங்கேற்று தங்களது கருத்துகளை முன்வைத்தனர்.