தஞ்சாவூர், ஜூன் 7-
தஞ்சாவூர் மாவட்டத்தில் பாபநாசம், கும்பகோணம், திருப்பனந்தாள் கீழமணக்குடி ஆகிய இடங்களில் உள்ள ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களில், ஜூன் 14-ஆம் தேதி முதல் பருத்தி மறைமுக ஏலம் நடைபெறவுள்ளது.
இதுதொடர்பாக தஞ்சாவூர் விற்பனைக் குழுச் செயலா ளர் ம.சரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில், ‘‘தஞ்சாவூர் விற்பனைக் குழுவின் கட்டுப்பாட்டில் உள்ள பாபநாசம், கும்பகோணம், திருப்பனந்தாள் கீழமணக்குடி ஆகிய ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களில் ஜூன் 14-ஆம் தேதி முதல் பருத்தி மறைமுக ஏலம் நடைபெறவுள்ளது.
விற்பனைக் கூடங்கள் வாரியாக கும்பகோணத்தில் புதன்கிழமைகளிலும், திருப்பனந்தாள், கீழமணக் குடியில் வியாழக்கிழமைகளிலும், பாபநாசத்தில் வெள்ளிக்கிழ மைகளிலும் காலை 10 மணியளவில் மறைமுக ஏலம் நடை பெறும்.
பருத்தியை நன்கு உலர்த்திய பிறகு அதில் கலந் துள்ள இலை சருகுகள், தூசுகள், பூச்சி நோய் தாக்கியது ஆகியவற்றை தனியாகப் பிரித்து தரத்தை மேம்படுத்த வேண்டும். பருத்தியை காற்றோட்டமான அறைகளில் மணல் பரப்பிய தரையில் சேமிக்க வேண்டும்.
பருத்தியை உலர வைக்க ஏதுவாக பாபநாசம், கும்ப கோணம் ஆகிய ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களில் பயன்பாட்டில் உள்ள பருத்தி உலர்த்தும் இயந்திர வசதியை விவசாயிகள் பயன்படுத்திக் கொள்ளலாம்.
மேலதிக விவரங்களுக்கு ஒழுங்கு முறை விற்பனைக் கூட பொறுப்பாளர்களை கும்பகோணம் 99409 13140, பாப நாசம் 9790169702, திருப் பனந்தாள் 73394 80137 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்’’ எனத் தெரிவித்துள் ளார்.