திருச்சிராப்பள்ளி, ஜன.30 - திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் கடந்த 16 ஆண்டுகளாக பத்மாவதி என்ற நிறுவனம் மூலம் ஒப்பந்த அடிப்படை யில் 120 தூய்மைப் பணியாளர்கள் பணியாற்றி வந்தனர். இந்நிலையில் 120 தூய்மை பணி யாளர்களும் ஜன.31 அன்று முதல் வேலையி லிருந்து நிறுத்தப்படுவதாக கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது. மேலும் மாவட்ட ஆட்சியர் தீர்மானித்த தினக்கூலி ரூ.678 வழங்காததை கண்டு கொள்ளாத கோவில் நிர்வாகத்தை கண்டித்தும், 120 தூய்மைப் பணியாளர்களுக்கும் தொடர்ந்து பணி வழங்க வலியுறுத்தியும் சிஐடியு திருச்சி மாநகராட்சி தொழிலாளர் சங்கம் சார்பில் செவ் வாயன்று ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில் ரங்கா ரங்கா கோபுரம் அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு திருச்சி மாநகராட்சி தொழிலாளர் சங்க மாவட்டத் தலைவர் இளைய ராஜா தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் மாறன், சிபிஎம் ஸ்ரீரங்கம் பகுதிச் செயலாளர் தர்மா, வாலிபர் சங்க பகுதிச் செயலாளர் சந்துரு மற்றும் சிஐடியு நிர்வாகிகள் கண்டன உரையாற் றினர். இதில் ஏராளமான ஒப்பந்த தூய்மைப் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.