districts

img

தோழர் கே.வி.ஆர். மார்க்ஸ் காலமானார்

திருவாருர், டிச.25 - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக் குழு உறுப்பினர் ஐ.வி.நாகராஜனின் அண்ணன் மகனும், கட்சியின் மாவட்டக் குழு உறுப்பினர் கே.வி.ராஜேந்திரனின் மூத்த மகனுமான கே.வி.ஆர்.மார்க்ஸ் திங்கள்கிழமை அதிகாலை அகால மரணமடைந்தார்.  திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி - கள்ளிக்குடியில் உள்ள அவரது இல்லத்தில் பொதுமக்களின் அஞ்சலிக்காக உடல் வைக்கப்பட்டது. அவரது இல்லத்திற்கு நேரில் சென்ற கட்சியின் மத்தியக் குழு உறுப்பினர் பெ.சண்முகம், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், நிர்வாக குழு உறுப்பினருமான ஜி.பழனிச்சாமி, சிபிஎம் கந்தர்வகோட்டை சட்டமன்ற உறுப்பினர் எம்.சின்னத்துரை, மாவட்டச் செயலாளர் ஜி.சுந்தரமூர்த்தி, அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்கத்தின் மாநிலத் தலைவர் ஏ.லாசர், பொதுச் செயலாளர் வீ.அமிர்தலிங்கம் ஆகியோர், தோழர் மார்க்ஸ் உடலுக்கு மலர்மாலை வைத்து அஞ்சலி செலுத்தினர். மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் சி.ஜோதிபாசு, கே.ஜி.ரகுராமன், விவசாயிகள் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் எம்.சேகர், தலைவர் எஸ்.தம்புசாமி, விவசாயத் தொழிலாளர் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் பி.கந்தசாமி மற்றும் திருத்துறைப்பூண்டி ஒன்றியச் செயலாளர் டி.வி.காரல் மார்க்ஸ், நகரச் செயலாளர் எம்.கோபு உட்பட மாவட்ட, ஒன்றியக் குழு உறுப்பினர்கள் அஞ்சலி செலுத்தினர். பிற்பகலில் தோழர் மார்க்ஸின் இறுதிநிகழ்ச்சி நடைபெற்றது.