நாகப்பட்டினம், ஆக.3-
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நாகப்பட்டினம் செயலாளராக பொறுப்பு வகித்து மறைந்த தோழர் ஏ.வி.முருகை யனின் மூன்றாம் ஆண்டு நினைவு தினம் வியாழனன்று கடைப்பிடிக்கப்பட்டது.
கட்சியின் மாவட்டக்குழு அலுவல கத்தில் நடைபெற்ற அஞ்சலி நிகழ்வில் மாநிலச் செயற்குழு உறுப்பினர் பி.செல்வ சிங், மாநிலக்குழு உறுப்பினரும் கீழ வேளூர் சட்டமன்ற உறுப்பினருமான நாகை மாலி, மாவடடச் செயற்குழு. மாவட் டக்குழு உறுப்பினர்கள் உட்பட ஏராள மானோர் செவ்வஞ்சலி செலுத்தினர்.
முன்னதாக ஏ.வி.முருகையன் வசித்த அவரது சொந்த ஊரான வெண்மணச்சேரி யில் கட்சியின் நாகப்பட்டினம் மாவட்டச் செயலாளர் வி.மாரிமுத்து செங்கொடியை ஏற்றினார். நிகழ்வில் கீழையூர் மேற்கு ஒன்றியச் செயலாளர் டி.வெங்கட்ராமன், ஏ.வி.முருகையனின் மனைவி ஜெயம் உள்ளிட்ட கிராம மக்கள் பங்கேற்றனர்.