districts

img

தோழர் பி.சீனிவாச ராவ் நினைவு தினம்: டெல்டா மாவட்டங்களில் புகழஞ்சலி

நாகப்பட்டினம், செப்.30 - ஒடுக்கப்பட்ட மக்களின் ஒப்பற்றத் தலைவர் தோழர் பி.சீனிவாச ராவ்  நினைவு தினம் சனிக்கிழமை கடைப்பிடிக்கப் பட்டது. இதையொட்டி டெல்டா மாவட்டங்களின் பல்வேறு இடங்களில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் அவரது உருவப்படத்திற்கு மல ரஞ்சலி செலுத்தப்பட்டது. கட்சியின் நாகப்பட்டினம் மாவட்டக் குழு அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு நாகை மாவட்டச் செயலாளர் வி.மாரிமுத்து, நாகை நகரச் செயலாளர் க.வெங்கடேசன், மாணவர் சங்க மாவட்டச் செயலாளர் மு.ஜோதிபாசு உள்ளிட்டோர் புகழஞ்சலி செலுத்தினர்.  நாகப்பட்டினம் தெற்கு ஒன்றியம் அகர ஒரத்தூர் கிளையில், தோழர் பி.சீனிவாச ராவ்  உருவப்படத்திற்கு புகழஞ்சலி செலுத்தப்பட் டது. இதில் நாகைமாலி எம்எல்ஏ செங்கொடி யினை ஏற்றி வைத்தார். ஒன்றியச் செயலாளர் ஏ.வடிவேல் உள்ளிட்டோர் கலந்து கொண்டார்.  வெண்மணி தியாகிகள் நினைவிடத்தில், செங்கொடி ஏற்றி செவ்வணக்கம் செலுத்தப் பட்டது. இதில் சிபிஎம் மாவட்டக் குழு உறுப்பி னர் ஏ.சிவகுமார் உள்ளிட்டோர் கலந்து கொண் டார். 

திருவாரூர்

கட்சியின் திருவாரூர் மாவட்டக் குழு அலு வலகத்தில், தோழர் பி.சீனிவாச ராவ் உருவப் படத்திற்கு மாலை அணிவித்து வீரவணக்கம் செலுத்தப்பட்டது. கட்சியின் மாவட்டச் செய லாளர் ஜி.சுந்தரமூர்த்தி செங்கொடி ஏற்றி வைத்து வீரவணக்கம் செலுத்தினார். அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் வீ.அமிர்தலிங்கம் உள்ளிட்ட பங்கேற்றனர்.

மயிலாடுதுறை

மயிலாடுதுறை மாவட்டக் குழு அலுவ லகம், திருக்கடையூர், இலுப்பூர் சங்கரன்பந்தல், டி.மணல்மேடு, ஆக்கூர், கிடங்கல், கீழையூர், குத்தாலம், சீர்காழி, கொள்ளிடம், பெரம்பூர் உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்ட மையங்களில் தோழர் பி.சீனிவாசராவ் படத்திற்கு மாலை அணிவித்து வீரவணக்கம் செய்தனர். பிஎஸ்ஆர் நினைவு தினத்தையொட்டி, திரு க்கடையூர் பகுதிகளில் விவசாயிகள் சங்கத் தின் மாவட்டத் தலைவர் டி.சிம்சன் தலைமை யில், தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், அகில  இந்திய விவசாயத் தொழிலாளர் சங்கங்களின்  சந்தா பதிவு இயக்கம் நடைபெற்றது. மாவட்டச் செயலாளர் எஸ்.துரைராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.  செம்பனார்கோவில் ஒன்றியம் கிடங்கல் கிராமத்தில் விவசாயத் தொழிலாளர் சங்கத் தின் மாவட்ட துணைத் தலைவர் வீ.எம்.சரவ ணன் தலைமையிலும், இலுப்பூரில் விவசாயத்  தொழிலாளர் சங்க ஒன்றியத் தலைவர் பால கிருஷ்ணன் தலைமையிலும் சந்தா பதிவு நடை பெற்றது. பட்டுக்கோட்டை தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், ஒன்றியச் செயலா ளர் எஸ்.கந்தசாமி தலைமையில் மலர்தூவி மரி யாதை செலுத்தப்பட்டது. நிகழ்ச்சியில், மூத்த தோழர் மெரினா ஆறுமுகம் உட்பட பலர் கலந்து  கொண்டனர்.  கும்பகோணம் கும்பகோணம் ரயிலடி முன்பு நடந்த நிகழ்ச்சியில், மாவட்ட செயற்குழு உறுப்பினர் அருளரசன், மாவட்டக் குழு உறுப்பினர் எம். கண்ணன், மாநகரச் செயலாளர் செந்தில் குமார், மாமன்ற உறுப்பினர் செல்வம், கும்பகோ ணம் ஒன்றியச் செயலாளர் கணேசன் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர். திருவிடை மருதூர் தெற்கு ஒன்றியம் நாச்சியார்கோவில் சிபிஎம் அலுவலகம் முன்பு ஒன்றியச் செயலா ளர் பழனிவேல் தலைமையில், ஒன்றியக் குழு  உறுப்பினர்கள் மலரஞ்சலி செலுத்தினர்.