திருவள்ளூர், ஆக 21- திருத்தணி கூட்டுறவு சர்க்கரை ஆலையை புனர மைத்து எத்தனால் மற்றும் இணை மின் உற்பத்தி நிலை யம் துவங்க உரிய நிதி ஒதுக் கீடு செய்ய வேண்டும் என வலியுறுத்தி தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கத் தின் சார்பில் புதனன்று (ஆக 21), திருவள்ளூரில் பெருந் திரள் முறையீட்டு ஆர்ப் பாட்டம் நடைபெற்றது. திருத்தணி கூட்டுறவு சர்க்கரை ஆலையை புனர மைத்து மேம்படுத்த வேண்டும். எத்தனால் உற்பத் தியுடன் கூடிய இணை மின் உற்பத்தி நிலையம் அமைக்க ரூ.192 கோடி நிதி ஒதுக்க வேண்டும். திமுக தேர்தல் அறிக்கை யில் கூறியபடி கரும்பு டன் ஒன்றுக்கு ரூ. 4000 வழங்க வேண்டும், வெட்டுக் கூலியை முறைபடுத்த வேண்டும். தேசிய கரும்பு மேம்பாட்டு நிதியில் திருத்தணி கூட்டு றவு சர்க்கரை ஆலை பெற்ற கடனை தமிழ்நாடு அரசு ரூ.16.32 கோடி தள்ளுபடி செய்ய வேண்டும், சர்க்கரை விற்பனையில் உள்ள கோட்டா முறையில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளித்திட வேண் டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலி யுறுத்தி தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கத்தின் சார்பில் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவல கம் அருகில் பெருந்திரள் முறையீடு நடைபெற்றது. இதற்கு தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கத்தின் மாநிலப் பொருளாளர் சி.பெருமாள் தலைமை தாங்கினார். இதில் தமிழ் நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் சாமி.நடராஜன், மாவட்டச் செயலாளர் ஜி.சம்பத், கரும்பு விவசாயி கள் சங்கத்தின் மாநில தலைவர் எஸ்.வேல்மாறன், மாவட்டச் செயலாளர் என். ஸ்ரீநாத், பொருளாளர் பி.பாபு, மாவட்ட நிர்வாகி கள் அப்சல் அகமது, கணபதி, மலைவாழ் மக்கள் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் ஆர்.தமிழ்அரசு உட்பட பலர் பேசினர். பின்னர் கோரிக்கைகள் அடங்கிய மனுவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அதிகாரிகளிடம் வழங்கி னர்.