தஞ்சாவூர், நவ.22 - தஞ்சை மாவட்ட ஊரக வளர்ச்சி உள்ளாட்சித் துறை ஊழியர் சங்கம் (சிஐடியு) சார்பில், மாநகராட்சி அலு வலகம் முன்பு, சிஐடியு மாவட்ட துணைச் செயலா ளர் கே.அன்பு தலைமை யில் மாநகராட்சி தூய்மைப் பணியாளர்கள் ஆர்ப்பாட்டத் தில் ஈடுபட்டனர். இதற்கு, சிஐடியு மாவட்டச் செயலாளர் சி. ஜெயபால் கோரிக்கை விளக்கவுரையாற்றினார். ஆர்ப்பாட்டத்தில், தஞ்சா வூர் மாநகராட்சியில் நிரந்தர தூய்மைப் பணியாளர்களாக சுமார் 300-க்கும் மேற்பட் டோர் பணியாற்றி வருகின்ற னர். இவர்கள் தங்கள் குடும்ப தேவைக்காக மாநக ராட்சி மூலம் கூட்டுறவு மற்றும் கடன் சங்கத்தின் மூலம் கடந்த 2015 ஆம் ஆண்டு முதல் கடன் பெற்று வருகின்றனர். இந்நிலை யில் தூய்மைப் பணியா ளர்கள் பெற்ற கடன் தொகை, மாதந்தோறும் சம்பளத்தி லிருந்து மாநகராட்சி மூலம் வட்டியுடன் பிடித்தம் செய்யப் படுகிறது. இந்நிலையில், மாநக ராட்சியால் பிடித்தம் செய்யப் படும் பணத்தை கூட்டுறவு சங்கத்தில் செலுத்தாத கார ணத்தால், தூய்மைப் பணியாளர்களுக்கு அபரா தத் தொகை விதிக்கப்பட்டு வருகிறது. எனவே, தூய்மை பணி யாளர்களிடம் பிடித்தம் செய்த 10 கோடியே 12 லட்சம் ரூபாயை மாநகராட்சி நிர்வாகம் உடனடியாக கூட்டு றவு சங்கத்திற்கு செலுத்த வேண்டும். ஓய்வு பெற்று பணிக்கொடையில் கடனுக் காக, சின்னம்மாள் என்பவரி டமிருந்து பிடித்த ரூ.4,14, 873-ஐ உடனடியாக திரும்ப வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலி யுறுத்தி முழக்கமிட்டனர். இதில், அரசு ஊழியர் ஊழியர் சங்க மாநிலச் செயலாளர் எஸ்.கோதண்ட பாணி, சிபிஎம் மாநகரச் செய லாளர் எம்.வடிவேலன், மாவட்டக் குழு உறுப்பினர் என்.குருசாமி, உள்ளாட்சித் துறை ஊழியர் சங்க மாவட்டத் தலைவர் பி.ஜேசு தாஸ், கட்டுமான சங்க மாவட்டச் செயலாளர் இ.டி.எஸ்.மூர்த்தி, மாவட்டத் துணைத் தலைவர் ஏ.ராஜா, மாவட்ட துணைச் செயலா ளர் சா.செங்குட்டுவன், சுமைப்பணி மாவட்டச் செய லாளர் த.முருகேசன், தரைக் கடை வியாபாரிகள் சங்க மாவட்டத் தலைவர் ஆர். மணிமாறன், அரசு போக்கு வரத்து சங்கம் ராமசாமி மற்றும் தூய்மைப் பணியா ளர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.