districts

img

சிஐடியு தலைவர் ஆர்.ரவீந்திரன் காலமானார்

மயிலாடுதுறை, பிப்.20 - இந்திய தொழிற்சங்க மையத்தின் (சிஐடியு) மயிலாடு துறை மாவட்டத் தலைவர் ஆர். ரவீந்திரன் செவ்வாயன்று கால மானார்.  மயிலாடுதுறை பட்டமங்கல  ஆராயகுளம் அருகேயுள்ள  சுந்தரமூர்த்தி பிள்ளையார்கோ வில் தெருவில் வசித்து வந்த சிஐடியு மாவட்டத் தலைவரும், மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் மயிலாடுதுறை மாவட்டக்  குழு உறுப்பினருமான ஆர்.ரவீந்திரன்,  திடீரென ஏற்பட்ட உடல் நலக்குறைவால், தஞ்சாவூரில் உள்ள தனியார் மருத்துவ மனையில் சிகிச்சை பெற்ற நிலையில், சிகிச்சை பலனின்றி செவ்வாயன்று காலமா னார். அவருக்கு வயது 66. கடலூரில் உள்ள தனியார் தொழில் நிறு வனத்தில் பணியாற்றியபோதே ஆர்.ரவீந்தி ரன் சிஐடியுவில் இணைந்து செயல்பட்டவர். பணியிலிருந்து ஓய்வு பெற்று கடந்த 8 ஆண்டுகளுக்கும் மேலாக மயிலாடுதுறை பகுதியில் சிஐடியு தொழிற்சங்கத்தை கட்ட மைப்பதில் தன்னை ஈடுபடுத்திக் கொண்ட வர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் தீவிர ஊழியராக செயல்பட்டு,  கட்சியின் அனைத்து போராட்டங் களிலும் முன்னின்றவர். ஒவ்வொரு  போராட்டங்களிலும் தவறாது பங்கேற்பதோடு தனது கம்பீரமான குரலால் கோரிக்கைகளை முழக்க மிட்டு அனைவரது கவனத்தையும் ஈர்த்தவர். இந்திய தொழிற்சங்க மையத்தின் முன்னாள் மாவட்டச் செயலாளராகவும் பணியாற்றியுள்ளார். பாரதி புத்தகாலயத்தின் கிளை பொறுப்பா ளராக செயல்பட்ட இவர், நீண்ட காலமாக தீக்கதிர் நாளிதழின் முகவராக திறம்பட பணி யாற்றினார். இவருக்கு இனிதா என்ற மனைவியும், கார்க்கி என்ற மகனும், வாணி ரத்னா என்ற மகளும் உள்ளனர். அவரது இறப்புக்கு மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் மயிலாடுதுறை மாவட்டக்  குழு ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்து உள்ளது.