திருவாரூர், ஜூலை 22 - சிஐடியு தலைவர் தோ ழர் மோகன் படத்திறப்பு திங்களன்று நடைபெற்றது. மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் முன்னணி ஊழியரும், நுகர்பொருள் வாணிபக் கழக பொது தொழிலாளர் சங்கம் (சிஐ டியு) இந்திய தொழிற்சங்க மையத்தின் மாநில துணை பொதுச் செயலாளருமான தோழர் ஆர்.மோகன் கடந்த ஜூலை 1 அன்று சாலை விபத்தில் காலமானார். திருவாரூர் மாவட்டம் நார்த்தங்குடியில் உள்ள அவரது இல்லத்தில் திங்க ளன்று தோழர் ஆர்.மோகன் படத்திறப்பு நிகழ்வு நடை பெற்றது. வலங்கைமான் ஒன்றியச் செயலாளர் என்.இராதா தலைமை வகித்தார். சிபிஎம் மாவட்டச் செயலாளர் ஜி. சுந்தரமூர்த்தி தோழர் மோ கன் உருவப்படத்தை திறந்து வைத்து வீரவணக்கம் செலுத்தி உரையாற்றினார். கட்சியின் முன்னாள் மாநிலக் குழு உறுப்பினரும் மூத்த தோழருமான என்.சீனிவா சன், தஞ்சை மாவட்டச் செய லாளர் சின்னை.பாண்டியன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் என்.நீலமேகம் மற்றும் விவசாயத் தொழி லாளர் சங்கத்தின் திருவா ரூர் மாவட்டச் செயலாளர் பி. கந்தசாமி, தமிழ்நாடு விவசா யிகள் சங்கத்தின் மாவட்டத் தலைவர் எஸ்.தம்புசாமி, துணைச் செயலாளர் கே. சுப்பிரமணியன், சிஐடியு மாவட்டத் தலைவர் எம். கே.என்.அனிபா, நுகர்பொ ருள் வாணிபக் கழக பொது தொழிலாளர் சங்கத்தின் மண்டல தலைவர் சி.ஆர்.அண்ணாதுரை மற்றும் தோழமை சங்கத்தினர் பலர் புகழஞ்சலி உரையாற்றினர். நீடாமங்கலம் ஒன்றியச் செயலாளர் டி.ஜான்கென் னடி, டிஎன்சிஎஸ்சி மண்டல பொருளாளர் கே.எஸ்.இராஜா, சிஐடியு மாவட்ட பொருளாளர் இரா.மாலதி, மாதர் சங்க மாவட்டப் பொருளாளர் ஆர்.சுமதி மற்றும் திருவாரூர், தஞ்சை மாவட்டக் குழு உறுப்பினர் கள், சிபிஎம் வலங்கைமான் ஒன்றியக் குழு உறுப்பி னர்கள், வெகுஜன அரங்கத் தினர் மலரஞ்சலி செலுத்தி னர்.