மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் க.பரமத்தி முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் தோழர் து.ரா. பெரியதம்பி அவர்களின் நினைவஞ்சலி கூட்டம் வியாழனன்று க.பரமத்தி கடைவீதியில் நடைபெற்றது. ஒன்றிய செயலாளர் சி.ஆர்.ராஜாமுகமது தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் மா.ஜோதிபாசு, மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ஜி.ஜீவானந்தம், கா.கந்தசாமி, சி.முருகேசன் ஆகியோர் பேசினர். , தோழர் து.ரா. பெரியதம்பியின் புதல்வர்கள் உலகப்பன், அன்புத்தம்பி கட்சியினர் கலந்து கொண்டனர்.