districts

img

கும்பகோணத்தில் அனைத்துத் தொழிற்சங்கங்கள் சார்பில் பிரச்சாரம் நடைபெற்றது

தொழிலாளர் விரோத- மக்கள் விரோத- ஜனநாயக விரோத ஒன்றிய அரசின் நடவடிக்கைகளைக் கும்பகோணத்தில் அனைத்துத் தொழிற்சங்கங்கள் சார்பில் பிரச்சாரம் நடைபெற்றது. சிஐடியு தஞ்சாவூர் மாவட்டத் தலைவர் எம்.கண்ணன், சிஐடியு மாவட்டச் செயலாளர் சி.ஜெயபால் மாவட்டத் துணைத் தலைவர் செங்குட்டுவன், சாலைப் போக்குவரத்துத் தொழிலாளர்கள் சம்மேளன மாநிலப் பொருளாளர் பார்த்தசாரதி, ஆட்டோ தொழிலாளர் சங்கம் சார்பில் ஜெயக்குமார், செந்தில்குமார் ஏஐடியுசி மாவட்டச் செயலாளர் தில்லைவனம், மணி மூர்த்தி, ஐஎன்டியுசி செல்வராஜ் எல்பி எஃப் பாரி, ஏசிசிடியு மதியழகன் உட்பட ஏராளமானோர் பங்கேற்றனர்.