districts

img

புதர்மண்டிக் கிடக்கும் பக்கிங்காம் கால்வாய்

கொள்ளிடம், நவ.1- கொள்ளிடம் அருகே கூழையாறு கிராமத்தில் பக்கிங்காம் கால்வாயில் மண்டி கிடக்கும் புதரை அகற்ற வலி யுறுத்தப்பட்டுள்ளது. மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளி டம் அருகே பழையாறு துறைமுகம் அருகில் துவங்கி கடற்கரை ஓரமாக வேதாரண்யம் வரை பக்கிங்காம் கால்வாய் உள்ளது. ஆங்கிலேயர்கள் ஆட்சிக் காலத்தில் இந்த கால்வாய் மூலம் நீர்வழிப் போக்குவரத்து நடை பெற்றது.  பல வகையான பொருட்கள் சென்னை பகுதியிலிருந்து கடற்கரை யோரப் பகுதிகளுக்கு எடுத்துச் செல்லப் பட்டதால், இந்த கால்வாய் நீர் வழிப்  போக்குவரத்தில் முக்கிய பங்காற்றி  வந்தது. வேதாரண்யம் பகுதியி லிருந்து உப்பு எடுக்கப்பட்டு இந்த கால் வாய் மூலம் சென்னை உள்ளிட்ட பகுதி களுக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளது.  காலப்போக்கில் பக்கிங்காம் கால் வாயில் படிப்படியாக நீர்வழி போக்கு வரத்து நிறுத்தப்பட்டுள்ளது. ஆனாலும்  இன்றும் நீர்வழிப் போக்குவரத்து நடை பெற்றதற்கான ஆதாரமாகவே இந்த கால்வாய் திகழ்கிறது. இந்த கால்வாய் பல இடங்களில்  ஆக்கிரமிக்கப்பட்டு இருப்பதால், இதன் இயற்கையான அகலம் மற்றும்  ஆழம் குறைந்து காணப்படுகிறது. சில  இடங்களில் கால்வாய் முழுவதும் மூடப் பட்டு கிடக்கிறது. கூழையாறு கிராமத் தில் சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரத்துக்கு,  பக்கிங்காம் கால்வாய் முழுவதும் நெய்வேலி காட்டாமணக்கு செடிகள் உள்ளிட்ட புதர்கள் மண்டி மூடிக் கிடக் கிறது.  இதனை தூர்வாரவில்லை எனில்,  நீர்வழிப் போக்குவரத்து நடந்ததற் கான தடயம்கூட இல்லாமல் போய்விடும். எனவே இந்த பக்கிங்காம் கால்வாயை முறையாக ஆழப்படுத்தியும், அகலப் படுத்தியும், ஆக்கிரமிப்புகளை அகற்றி யும் மீட்டு கொண்டு வர வேண்டும்.  இந்த கால்வாயை மேம்படுத்து வதன் மூலம், பாதுகாப்பான நீர்வழிப்  போக்குவரத்தை மீண்டும் கொண்டு வர  முடியும். கால்வாயின் இயற்கை அழகு மாறாமல் தூர்வார நடவடிக்கை எடுக்க  வேண்டும் என்று கடலோர கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.