அறந்தாங்கி, ஜன.17 - புதுக்கோட்டை மாவட்டம் திருவாப்பாடி யில் ஆண்டுதோறும் பொங்கல் பண்டி கையையொட்டி, மாட்டுவண்டி எல்கை பந்தயம் நடைபெறுவது வழக்கம். 70 ஆவது ஆண்டாக நடைபெற்ற மாட்டு வண்டி எல்கை பந்தயத்தில் புதுக்கோட்டை, சிவகங்கை, தஞ்சை, இராமநாதபுரம் உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்க ளிலிருந்து 85 ஜோடி மாடுகள் போட்டியில் பங்கேற்றன. பெரிய மாடு, நடுமாடு, கரிச்சான், பூஞ்சிட்டு என 4 பிரிவுகளாக நடை பெற்ற பந்தயத்தில் பெரிய மாடு பிரிவில் 9 ஜோடி மாடுகளும், நடுமாடு பிரிவில் 18 ஜோடி மாடுகளும், கரிச்சான் மாடு பிரிவில் 15 ஜோடி மாடுகளும், பூஞ்சிட்டு மாடு பிரி வில் 43 ஜோடி மாடுகளும் கலந்து கொண்டன. வெற்றி பெற்ற மாடுகளுக்கு ரூ.3 லட்சம் மதிப்பிலான கோப்பைகள், ரொக்கப் பணம் பரிசாக வழங்கப்பட்டது. மேலும் மாடு களை சிறப்பாக ஓட்டி வந்த சாரதிகளுக்கு கொடிப் பரிசு மற்றும் கேடயங்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டது. மணமேல்குடி காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டி ருந்தனர்.