districts

ஆட்டோ ஓட்டுநர் நலவாரிய பதிவுக்கு இன்று சிறப்பு முகாம்

தஞ்சாவூர், ஜூலை 21-

    தஞ்சை தொழிலாளர் நல உதவி ஆணையர் (சமூக பாதுகாப்பு திட்டம்) உமா மகேஸ்வரி விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

   தஞ்சை மாவட்ட ஆட்சியரின் அறிவுறுத்தலின்படி பதிவு  குறைவாக உள்ள ஆட்டோ மற்றும் இதர வாகன ஓட்டு நர்களின் நலவாரியப் பதிவை அதிகரிக்க, நலவாரிய பதிவு  சிறப்பு முகாம்கள் தஞ்சை மாவட்டத்தின் பல்வேறு பகுதி களில் நடத்தப்பட்டு வருகின்றன.

   அதன் தொடர்ச்சியாக ஜூலை 22 (சனிக்கிழமை) பட்டுக் கோட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில்  காலை 9 மணி முதல் மதியம் 3 மணி வரை ஆட்டோ ஓட்டு நர்கள் மற்றும் இதர வாகனங்களை ஓட்டும் ஓட்டுநர்களுக் கான நலவாரிய பதிவு சிறப்பு முகாம் நடைபெற உள்ளது.  

   ஆதார் எண் இணைக்கப்பட்ட கைப்பேசி, ஓட்டுநர் உரிமம்,  வங்கி கணக்கு புத்தகம், ஆதார் அட்டை, குடும்ப அட்டை  மற்றும் குடும்ப உறுப்பினர்களின் ஆதார் அட்டை உள்ளிட்ட அனைத்து தொடர்புடைய அசல் ஆவணங்களுடன் ஓட்டுநர்கள் அனைவரும் முகாமில் கலந்து கொண்டு பதிவு  செய்யலாம்.

   இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.