districts

ஆக.18-27 மன்னார்குடியில் புத்தகத் திருவிழா

மன்னார்குடி, ஆக.16-

      மன்னார்குடி மிட்டவுன் ரோட்டரி சங்கமும் தமிழ்நாடு அறிவியல் இயக்க மும் இணைந்து நடத்தும் “மன்னார்குடி 3வது புத்தகத் திருவிழா-2023” ஆகஸ்ட் 18  முதல் 27 வரை 10 நாட்கள் நடைபெற உள்ளது.

     திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி தேசிய மேல்நிலைப் பள்ளியில் நடை பெறும் இப்புத்தக திருவிழாவில் மாண வர்களுக்கு சிறப்பு சலுகையாக 15 சதவீத மும், பொதுமக்களுக்கு 10 சதவீதமும் நூல்  விலையில் தள்ளுபடி தரப்படும்.  

     முதல் நாளான ஆக.18 அன்று மாலை  4 மணிக்கு புத்தகத் திருவிழா பேரணியை  மன்னார்குடி காவல் துணை கண்காணிப்பா ளர் அஸ்வத் ஆண்டோ, தேரடி காந்தி சிலை யிலிருந்து துவக்கி வைக்கிறார்.

     மாலை 6 மணிக்கு மாவட்ட ஆட்சியர் தி.சாருஸ்ரீ தலைமை வகிக்கிறார். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் து.பெ.சுரேஷ்குமார் முன்னிலை வகிக்கிறார். புத்தக திருவிழா வை தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா திறந்து வைக்கிறார். திரைப்பட இயக்குநர் வசந்தபாலன் புத்தகத் திருவிழா நோக்க உரையாற்று கிறார். மாவட்ட முதன்மை கல்வி அலு வலர் ஏ.புகழேந்தி, மாவட்ட நூலக அலு வலர் க.முருகன், மன்னார்குடி நகர்மன்ற தலைவர் மன்னை த.சோழராஜன் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.  

    புத்தகத் திருவிழா நாட்களில், தின மும் கல்வியாளர்கள், கவிஞர்கள் பங்கேற்  கும் நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன.