மயிலாடுதுறை, நவ.28- மயிலாடுதுறை மாவட்டம் ,ஆக்கூர் அரசு மேல்நிலைப்பள்ளி, பொறையார் டி.பி.எம்.எல் கல்லூரி, மயிலாடுதுறை ஏ.வி.சி.கலை மற்றும் அறிவியல் கல்லூரி ஆகிய இடங்களில் முத்தமிழறிஞர் கலை ஞர் அவர்களின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு “சட்டமன்ற நாயகர் கலைஞர்” கருத்தரங்கம் நடைபெற்து. இதில சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்ய நாதன் கலந்து கொண்டு போட்டிகளில் வெற்றி பெற்ற பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு பாராட்டு சான்றிதழ்களை வழங்கினார். இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியர் ஏ.பி.மகாபாரதி தலைமை வகித்தார். அரசு தலைமை கொறடா முனைவர் கோவி.செழி யன், பூம்புகார் சட்டமன்ற உறுப்பினர் நிவேதா எம்.முருகன் , சீர்காழி சட்டமன்ற உறுப்பினர் எம்.பன்னீர்செல்வம், மயி லாடுதுறை சட்டமன்ற உறுப்பினர் எஸ்.ராஜ குமார் ,மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் .உமாமகேஸ்வரி சங்கர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கருத்தரங்கில் அமைச்சர் மெய்ய நாதன், அரசு தலைமை கொறடா கோவி.செழியன் ஆகியோர் உரையாற்றினர். தமிழ்நாடு சட்டமன்ற கூடுதல் செயலர் ரவி சந்திரன், தமிழ்நாடு சட்டமன்ற இணையச் செயலர் ஜெயகணேசன், மயிலாடுதுறை நகராட்சி தலைவர் செல்வராஜ், மயிலாடு துறை ஒன்றிய குழு தலைவர் காமாட்சி மூர்த்தி, தரங்கம்பாடி பேரூராட்சி தலைவர் சுகுண சங்கரி,செம்பனார்கோவில் ஒன் றிய குழு துணைத்தலைவர் பாஸ்கரன், ஒன்றிய குழு உறுப்பினர் வே.சாந்தி, ஆக்கூர் ஊராட்சி மன்ற தலைவர் சந்திர மோகன் மற்றும் அரசு அலுவலர்கள், உள்ளாட்சி அமைப்பின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.