மயிலாடுதுறை, மார்ச் 12 - மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி வட்டம் திருக்கடையூரில் மாணவர் சேர்க்கை விழிப்புணர்வுப் பேரணி நடைபெற்றது. செம்பனார்கோவில் ஒன்றியம், திருக்கடை யூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் நடைபெற்ற பேரணியை ஒன்றியக் குழு துணை தலைவர் பாஸ்கர் தொடக்கி வைத்தார். பள்ளி வளாகத்தில் இருந்து திருக் கடையூர் முக்கிய வீதிகள் வழியாக மாண வர்கள் பதாகைகளை ஏந்தியவாறு பேரணி யாக சென்று மீண்டும் பள்ளியை வந்தடைந்த னர். பள்ளி தலைமை ஆசிரியர் க.ஞானப்பிரகா சம், பள்ளி வளர்ச்சி குழு செயலாளர் செந்தில் உள்ளிட்ட ஆசிரியர்கள், மாணவர்கள் பங்கேற் றனர். இதில், ஐந்து வயது நிரம்பிய குழந்தை களை அரசுப் பள்ளியில் சேர்த்து, தமிழக அரசு வழங்கும் சலுகைகளை பயன்படுத்திக் கொள்ள வலியுறுத்தப்பட்டது.