திருவாரூர், ஆக.25 -
ஆன்-லைன் அபராத முறையை ரத்து செய்யக் கோரி ஆட்டோ தொழிலா ளர்கள் சங்கம் சார்பில் வெள்ளிக்கிழமை மாநிலம் தழுவிய கண்டன ஆர்ப்பாட் டம் நடைபெற்றது.
திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத் திற்கு ஆட்டோ தொழிலாளர் சங்க மாவட்டத் தலைவர் கே.செல்வம் தலைமை வகித்தார்.
சிஐடியு மாவட்டச் செயலாளர் டி.முருகை யன், ஆட்டோ தொழிலாளர் சங்க மாவட்டச் செயலாளர் என்.அனிபா, மாவட்ட பொருளாளர் டி.வீரமணி மற்றும் ஆட்டோ தொழி லாளர் சங்க நிர்வாகிகள் 100 -க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
இதில், ஆட்டோ தொழி லாளர்களுக்கு தீபாவளி போனசாக ரூ.5000 வழங்கிட வேண்டும். தமிழகம் முழு வதும் பைக்-டாக்ஸியை தடை செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினர்.
புதுக்கோட்டை
புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே நடைபெற்ற ஆர்ப் பாட்டத்திற்கு சங்கத்தின் மாவட்ட பொதுச் செயலா ளர் ஆர்.மணிமாறன் தலைமை வகித்தார். கோரிக் கைகளை விளக்கி சிஐடியு மாவட்டத் தலைவர் கே. முகமதலிஜின்னா, பொரு ளாளர் எஸ்.பாலசுப்பிரமணி யன், துணைச் செயலாளர் சி.மாரிக்கண்ணு, கட்டு மானத் தொழிலாளர் சங்க மாவட்டச் செயலாளர் க. ரெத்தினவேல், ஏ.முத்தையா உள்ளிட்டோர் பேசினர்.
தஞ்சாவூர்
மாநகர ஆட்டோ ஓட்டு நர்கள் சங்கம் (சிஐடியு) சார்பில் தஞ்சாவூரில் நடை பெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு ஆட்டோ சங்க மாநகரச் செய லாளர் ஏ.ராஜா தலைமை வகித்தார். சிஐடியு மாநிலச் செயலாளர் சி.ஜெயபால் உள்ளிட்டோர் பேசினார்.