திருச்சிராப்பள்ளி, செப்.20 - திருச்சி மாநகராட்சிக்குட்பட்ட 35 மற்றும் 16 ஆவது வார்டு பகுதிகளான தெற்கு உக்கடை மற்றும் வடக்கு உக்கடை சர்வீஸ் சாலையும், அதனை இணைக்கும் சுரங்கப் பாதை சாலையும் பல ஆண்டுகளாக மேடும் பள்ளமாக உள்ளது. இப்பகுதியில் தினந்தோ றும் விபத்துகள் நடப்பதால் இச்சாலையில் உள்ள பள்ளங்கள் மரண பள்ளங்களாகவே மாறி உள்ளன. இச்சாலைகளை சீரமைக்க கோரி தேசிய நெடுஞ்சாலை துறையிடம் பலமுறை மனு கொடுத்தும் இதுவரை எவ்வித நடவ டிக்கையும் எடுக்க வில்லை. இதனை கண்டித்தும் சாலை களை உடனடியாக சீரமைக்க வலியுறுத்தி யும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் உக்கடை கிளைகள் சார்பில் தெற்கு உக்கடை செல்லும் சுரங்கப் பாதையில் படுத்து உரு ளும் போராட்டம் வெள்ளியன்று நடந் தது. போராட்டத்திற்கு கிளைச் செயலாளர்கள் செல்வராஜ், சாகுல் ஹமீது ஆகியோர் தலைமை வகித்த னர். போராட்டத்தில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் கார்த்திகேயன், பாலக்கரை பகுதி செயலாளர் சுரேஷ், பகுதி குழு உறுப் பினர்கள் கனல் கண்ணன், பொன்மகள் உள்ளிட்டோர் முழக்கமிட்டவாறு போராட் டத்தில் ஈடுபட்டனர். பின்னர் போலீசார் மற்றும் நெடுஞ் சாலைத் துறையினர் பேச்சுவார்த்தைக்கு அழைத்ததின் பேரில் போராட்டம் தற்காலிக மாக கைவிடப்பட்டது.