சிவகங்கை, ஆக.25- சிவகங்கையை அடுத்துள்ள முத்துப் பட்டி பொன்னாகுளத்தில் யானைச் சின்னத்து டன் கூடிய சூலக்கல் கண்டெடுக்கப்பட்டுள் ளது. பொன்னாகுளத்தைச் சேர்ந்த மாதவன், புத்தகக் கடை முருகன் ஆகியோர் கொடுத்த தகவலின் படி சிவகங்கை தொல்நடைக் குழு நிறுவனர் புலவர் கா.காளிராசா, செயலர் இரா.நரசிம்மன், கள ஆய்வாளர் கா.சர வணன் ஆகியோர் அப்பகுதியில் ஆய்வு மேற்கொண்டனர். இதுகுறித்து சிவகங்கை தொல்நடைக் குழு நிறுவனர் புலவர் கா.காளிராசா செய்தி யாளர்களிடம் தெரிவித்ததாவது: சிவகங்கை மாவட்டம் முத்துப்பட்டி பொன்னாகுளம் புதுக் கண்மாயில் யானைச் சின்னம் பொறித்த சூலக்கல் கண்டுபிடிக் கப்பட்டுள்ளது. பொதுவாக சூலக்கல் கோவி லுக்கு தானமாக வழங்கப்படும் எல்லை களை குறிப்பதற்காக நடப்படும். சிவன் கோவில் சார்ந்த சொத்தாக இருந்தால் சூலக் கல்லும், பெருமாள் கோவிலுக்கு விடப்பட்ட தேவதானம், இறையிலி போன்றவற்றை குறிப்பதற்காக திருவாழிச்சின்னம் பொறித்த கல்லும் நடப்படுவது வழக்கம். ஆனால் இங்கு காணப்படுகிற சூலக்கல்லின் கீழே யானை இடம் பெற்றுள்ளது சிறப்புக்குரி யது. பொன்னா குளம் புதுக் கண்மாய் உள் பகுதியில் இச்சூலக்கல் காணப்படுகிறது. இரண்டரை அடி உயரமும் ஒரு அடி அகலம் உடையதாக இச்சூலக்கல் காணப்படுகிறது. இதில் திரிசூலத்தின் கீழ்பகுதியில் யானை பொறிக்கப்பட்டுள்ளது. யானைப் படையை உடைய வணிகர்கள், அத்திகோசத்தார் எனப் பட்டனர். பெருவழிகளில் வணிகர்களைப் பாதுகாப்பதற்காக இவர்கள் நிறுத்தி வைக் கப்பட்டிருந்தனர். மன்னர்கள் கோயில் களுக்கு கொடையளிக்கும்போது உடனி ருந்து, அக்கொடையை பாதுகாக்கும் பணி களையும் இவர்கள் செய்துள்ளனர். இவர் களைப் பற்றிய குறிப்பு பூலாங்குறிச்சி கல் வெட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது. இன்றும் இயங்குகிற மதுரை தொண்டி வணிகப் பெரு வழியில் இருந்து 400 மீட்டர் தொலைவில் இச்சூலக்கல் நடப்பட்டுள்ளது. இங்கு தங்கி யிருந்த அத்திகோசத்தார் எனும் யானைப் படையை உடையவர்கள் தானமாக வழங்கிய நிலத்தில் அவர்களின் யானைச் சின்னத்துடன் கூடிய சூலக்கல்லை நட்டு வைத்திருக்கலாம். இவ்வாறான சிறப்பு பொருந்தியதாக இச்சூலக்கல்லை கருத வும் இடமுண்டு. காளையார்கோவில் வட்டம் சாத்தரசன் கோட்டையை அடுத்துள்ள அதப்படக்கி பாப்பாகுடியில் இவ்வாறான யானைச் சின்னத்துடன் கூடிய சூலக்கல், அங்குள்ள மக்களால் சமயனாக வழிபடப்படு கிறது. அச்சூலக்கல் சில ஆண்டுகளுக்கு முன்னாள் இராமநாதபுரம் தொல்லியல் ஆய்வாளர் ராஜகுரு மற்றும் என்னால் அடையாளப்படுத்தப்பட்டது குறிப்பிடத்தக் கது. மேலும் பொன்னாகுளம் பகுதியில் வெட்டிக்குளம் கண்மாய்ப் பகுதியில் திரி சூலம் பொறித்த மற்றொரு சூலக்கல் ஒன் றும், ஊரையொட்டிய பகுதியில் திரு வாழிக்கல் ஒன்றும் காணப்படுகிறது. புதுக்குளம் கண்மாயில் கல்வெட்டு புதுக்குளம் கண்மாயில் நான்கு பக்க மும் செதுக்கப்பட்ட கல்வெட்டு ஒன்று நடப் பட்டுள்ளது. ஆனால் கல்வெட்டு எழுத்துகள் முழுவதும் சிதைந்து கற்பொடியாகி கீழே விழுந்து விட்டன. ஒவ்வொரு பகுதியிலும் ஒரு சில எழுத்துகள் மட்டுமே தெரிகின்றன. தெரிகிற எழுத்தைக் கொண்டு ஒரு பகுதி யில் நட்சத்திரம் குறிப்பிடப்பட்டதை உணர முடிகிறது. மற்றொரு பகுதியில் விசய என்கிற சொல்லை மட்டும் அடையாளப்படுத்த முடி கிறது. எழுத்தமைதியைக் கொண்டு இக்கல் வெட்டு 17,18 ஆம் நூற்றாண்டாக கருத முடி கிறது. விசய என்கிற சொல்லை கொண்டு இக்கல்வெட்டு சேதுபதி மன்னர்களுடைய தாகவோ அல்லது சிவகங்கையை ஆண்ட மன்னர்களை குறித்த பெயராகவோ இருக்க லாம் என கருத முடிகிறது. யானைச் சின்னம் பொறித்த சூலக்கல் கிடைத்து இருப்பதில் மகிழ்ச்சி அடைகிறோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.