districts

img

நான்கு வழிச்சாலையால் வீடுகள் இழப்பு ஒரு மாதமாக வீதியில் வசிக்கும் 9 குடும்பங்கள் மயிலாடுதுறை ஆட்சியர் நடவடிக்கை எடுப்பாரா?

மயிலாடுதுறை, செப்.23 - விழுப்புரம் முதல் நாகை வரையி லான நான்கு வழிச்சாலை பணி தீவிர மாக நடைபெற்று வருகிறது. இந்நிலை யில் மயிலாடுதுறை மாவட்டம், ஆக்கூர் அருகேயுள்ள தலையுடை யவர்கோவில், தலைச்சங்காடு பகுதி யில் சாலைப் பணியால் வீடுகளை இழந்த 9 குடும்பங்கள் வசிக்க இட மின்றி வீதிகளில் வசிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.  கடந்த ஒரு மாதமாக வசிக்க இட மின்றி தவிக்கும் மக்கள், மயிலாடு துறை மாவட்ட ஆட்சியரிடம் மார்க்சிஸ்ட்  கம்யூனிஸ்ட் கட்சியின் செம்பனார் கோவில் ஒன்றியச் செயலாளர் கே.பி. மார்க்ஸ் தலைமையில் மக்கள் குறைதீர் முகாமில் மனு அளித்தனர்.  குழந்தைகள், வயதுக்கு வந்த  பெண் பிள்ளைகளோடு அவர்கள் வசித்த வீடுகள் இடித்து அகற்றப்பட்டன.  அந்த இடங்களில் இருந்த தென்னை, புளியமரம், மாமரம், சந்தன மரம் உள்ளிட்ட 40-க்ம்கு மேற்பட்ட உயிர் மரங்களும் விரிவாக்க பணிக்காக அழிக்கப்பட்டன.  கையகப்படுத்தப்பட்ட இடத்துக் கான இழப்பீட்டுத் தொகை வழங்கப் படும் என தனி மாவட்ட வருவாய் அலு வலர் உறுதி அளித்திருந்த நிலையில்,  இதுவரை இழப்பீடுத் தொகை அந்த  குடும்பத்தினருக்கு வழங்கப்பட வில்லை. இதனால் தங்குவதற்கு இட மில்லாமல் அந்த குடும்பங்களைச் சேர்ந்த குழந்தைகள் உள்ளிட்ட அனை வரும் கடந்த ஒரு மாதமாக தங்கள் உற வினர்களின் வீடுகளிலும், மரத்தடி யிலும் தங்கி காலத்தை கடத்தி வரு கின்றனர்.  இதுகுறித்து மாவட்ட ஆட்சியரிடம் ஏற்கனவே புகார் அளித்திருந்தும் இது வரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றார் கே.பி.மார்க்ஸ்.  பாதிக்கப்பட்ட மக்கள் மீண்டும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர் கூட்டத் தில் மனு அளித்துள்ளனர். கையகப்படுத் தப்பட்ட இடத்துக்குப் பதிலாக மாற்று  இடம் வழங்க வேண்டும் என்றும், அதற் கான இழப்பீட்டுத் தொகையை வழங்க வேண்டும் என்றும்    கோரிக்கை  வைத்துள்ளனர்.  இனியும் அலட்சியப்படுத்தினால் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வந்து குடியேறுவதை தவிர வேறு வழி யில்லை என்றனர்.