districts

img

ஏகோஜி மகாராஜபுரத்தில் 5 ஆவது நாளாக போராட்டம்

மயிலாடுதுறை, ஜூலை-10-  மயிலாடுதுறை மாவட்டம், கொள் ளிடம் ஒன்றியம், மாதானம் அருகே யுள்ள ஆலங்காடு ஊராட்சி, ஏகோஜி மகாராஜபுரம் கிராமத்தில் குடியிருக்க இடம் கேட்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்  கட்சியின் தலைமையில் அப்பகுதி யை சேர்ந்த தலித் மக்கள் நடத்தி வரும் போராட்டம் புதன்கிழமை யன்று 5 ஆவது நாளாக தொடர்ந்து நடைபெற்றது. ஏகோஜிமகாராஜபுரம், மேலத் தெருவில் வசிக்கும் பட்டியலின மக்கள்  சிறிய அளவிலான காலணி வீடுகளில் கடும் நெருக்கடியான இடத்தில் வசித்து வருவதால் கடந்த பல ஆண்டுகளாக குடியிருக்க இடம் கேட்டு அரசு துறையிடம் கோரிக்கை விடுத்து வந்தனர்,இதில்  எந்தவித நட வடிக்கையும் இல்லை. அதேப்பகுதி யில் உள்ள 3.5 ஏக்கர் பரப்பள விலான இடத்தை 45 குடும்பங்க ளுக்கு பிரித்து தரவேண்டுமென்ற கோரிக்கையை முன்வைத்து அந்த இடத்தில் குடிசைக்கட்டி குடியேறும் போராட்டத்தை  சனிக்கிழமையன்று முதல் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்  கட்சி யின் மாவட்ட செயலாளர் பி.சீனிவா சன் தலைமையில் இரவு,பகலாக தொடர்ந்து நடத்தி வருகின்றனர்.கட்சியின் மாவட்டசெயற்குழு, மாவட்டக்குழு உறுப்பினர்கள், ஒன்றிய செயலாளர்கள், ஒன்றி யக்குழு உறுப்பினர்கள், கிளை செய லாளர்கள், வாலிபர்,மாதர் சங்க நிர்வாகிகள் உள்ளிட்ட 300 க்கும் மேற்பட்டோர் 5  ஆவது நாளான புதனன்று குடியேறிய இடத்திற்கு வெண்மணி நகர் என பெயர்சூட்டி பெயர் பலகை வைத்து தொடர்ந்து  போராட் டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.