districts

திருச்சி முக்கிய செய்திகள்

புதுக்கோட்டையில் 43 பேருக்கு டெங்கு

புதுக்கோட்டை, செப்.15 - புதுக்கோட்டை மாவட்டத்தில் கடந்த செப்.1 அன்று முதல் வியாழக்கிழமை (செப்.14) மாலை வரை 14 நாட்களில், 43  பேருக்கு டெங்குக் காய்ச்சல் உறுதிப்படுத்தப் பட்டுள்ளது. பகலில் கடிக்கும் ஏடிஸ் வகைக் கொசுக் கள், தூய மழைநீர் தேங்கும் இடங்களில் முட்டையிட்டுப் பெருகி, டெங்குக் காய்ச்சலை உருவாக்குகின்றன. தற்போது  மாநிலம் முழுவதும் பரவலாக அவ்வப் போது மழை பெய்து வருவதால் டெங்குக் காய்ச்சலும் பரவலாகி வருகிறது. புதுக்கோட்டையில் கடந்த செப்.1 முதல்  செப்.14 வரை மொத்தம் 43 பேருக்கு டெங்குக் காய்ச்சல் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இவர் களில் 4 பேர் வியாழக்கிழமை உறுதிப்படுத்தப்பட்டவர்கள். இந்த 4 பேரில்  2 பேர் அறந்தாங்கி நகராட்சிப் பகுதியைச் சேர்ந்தவர்கள். 2 பேர் திருவரங்குளம் ஒன்றியப் பகுதியைச் சேர்ந்தவர்கள். டெங்கு உறுதிப்படுத்தப்பட்டு சிகிச்சை பெறுவோரில் பெரும்பாலானவர்கள் தனி யார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். ஒவ்வொரு நாளும் சராசரியாக 15 முதல் 20 பேர் காய்ச்சல் காரணமாக மருத்துவ மனைக்கு வரும் நிலையில், அவர்களிடம் செய்யப்படும் பரிசோதனையில் சராசரியாக 2 முதல் 5 பேருக்கு டெங்கு உறுதி செய்யப்படு கிறது என சுகாதாரப் பணிகள் துணை இயக்கு நர் டாக்டர் ராம்கணேஷ் தெரிவித்தார்.

தந்தை பெரியார் பிறந்தநாள் விழா

தஞ்சாவூர்,  செப்.15 -  தஞ்சையை அடுத்த வல்லம் பெரியார் மணி யம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தில், தந்தை பெரியாரின் 145 ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா நடைபெற்றது.  பெரியார் மணி யம்மை அறிவியல் தொழில்நுட்ப நிறுவன துணைவேந்தர் செ. வேலுச்சாமி தலைமை உரையாற்றினார். இதில்,  ஊடகவியலாளர் கோவி.லெனின் சிறப்புரை யாற்றினார். முன்னதாக பல் கலைக்கழக மனிதவள மேம்பாட்டு மைய இயக்குநர் (பொ) இணைப் பேராசிரியர் சத்யபிரியா வரவேற்றார்.  மாணவி அபிநயா இணைப்புரை யாற்றி னார். விழாவில், மாண வர்கள் சமூக நீதிநாள் உறுதிமொழி ஏற்றனர். மேலும் பேச்சுப்போட்டி, கவிதை போட்டி, கட்டு ரைப் போட்டியில் வெற்றி  பெற்ற மாணவ, மாணவி களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

அரசு அலுவலகங்களில் கைப் பிடியுடன்கூடிய சாய்வு தளம் அமைத்துத் தருக!

மாற்றுத்திறனாளிகள் சங்கம் ஆர்ப்பாட்டம்

மாற்றுத்திறனாளிகள் சங்கம் ஆர்ப்பாட்டம் மயிலாடுதுறை, செப்.15 - அரசு அலுவலகங்களில் கைப் பிடியுடன்கூடிய சாய்வு தளம் அமைத்துத் தர வேண்டுமென கோரி மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டத் தில் ஈடுபட்டனர். தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாது காப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் சார்பில் மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு பல்வேறு கோரிக் கைகளை வலியுறுத்தி வெள்ளி யன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. சங்கத்தின் ஒன்றியத் தலைவர் ஆர்.நாகராஜன் தலைமை வகித்தார்.  மாவட்டத் தலைவர் டி.கணேசன், மாவட்டச் செயலாளர் எம்.புரு ஷோத்தமன் மற்றும் மாவட்ட, ஒன்றிய நிர்வாகிகள் கண்டன உரை யாற்றினர். மாற்றுத்திறனாளிகள் அரசின் அனைத்து சலுகைகளையும் பெறு வதற்கு, கொள்ளிடம், சீர்காழி யூனி யன் அலுவலகம், சீர்காழி தாலுகா  அலுவலகங்களில் பதிவு செய்ய அரசு இ-சேவை மையம் அமைத்துத்  தர வேண்டும். மாற்றுத்திறனாளி களுக்கு நிபந்தனையின்றி வங்கிக் கடன் வழங்க வேண்டும்.  சீர்காழி தாலுகா அலுவலகம் மற்றும் அரசு அலுவலகங்களில் கைப் பிடியுடன்கூடிய சாய்வு தளம் அமைத்து கொடுக்க வேண்டும். நூறு  நாள் வேலையில் பணி அட்டை  வழங்க வேண்டும். மாற்றுத்திறனாளிக்கு இலவச வீடு, வீட்டுமனை மற்றும் பட்டா கோரி வரு வாய் கோட்டாட்சியரிடம் கொடுக்கப் பட்ட மனுக்கள் மீது விரைவில் நடவ டிக்கை எடுக்க வேண்டும். மாதந்தோறும் சீர்காழி அரசு  மருத்துவமனையில் நடைபெறும் மருத்துவ முகாமில், மருத்துவர் பங்கேற்பதை உறுதி செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக் கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத் தில் ஈடுபட்டனர்.

புல உதவியாளர்களை தனியார் முகமை மூலம் நியமிக்க எதிர்ப்பு

திருவாரூர், செப்.15 -  புல உதவியாளர்களை தனியார் முகமை மூலம் நிய மிக்கும் நடவடிக்கையை தமிழ்நாடு அரசு கைவிட கோரி நில அளவை அலுவலர்கள் சங்கத்தினர் சார்பில்  திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு அமைப்பின் மாவட்டத் தலை வர் எஸ்.கார்த்திகேயன் தலைமை வகித்தார். மாவட்டச்  செயலாளர் கே.கார்த்திகேயன், அரசு ஊழியர் சங்க  மாவட்டப் பொருளாளர் எஸ்.செங்குட்டுவன் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி உரையாற்றினார். அமைப்பின்  மாவட்டப் பொருளாளர் மகேஸ்வரி, அரசு ஊழியர் சங்கத் தின் இணைச் செயலாளர் மகாலிங்கம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.  நில அளவை துறையில் காலமுறை ஊதியத்தில் பணியமர்த்தப்பட்ட நிரந்தரப் பணியாளர்களான  புல  உதவியாளர் பணியிடங்களை தனியார் மூலம் அத்தக் கூலிக்கு நியமித்துக் கொள்ளலாம் என்று தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அரசாணை (2டி) எண்.297-ஐ திரும்ப  பெற வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலி யுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

பெட்ரோல் நிலையம் அமைக்க விண்ணப்பங்கள் வரவேற்பு

கரூர், செப்.15 - பாரத் பெட்ரோலியம் நிறுவனத்தின் மூலம் பெட்ரோல்  நிலையம் அமைக்க தேர்ந்தெடுக்கப்படும் விண்ணப்பதா ரர்களுக்கு தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும்  மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) சார்பாக, ஆதிதிராவிடர்  மற்றும் பழங்குடியின வகுப்பைச் சேர்ந்தவர்களுக்கு தாட்கோ மூலம் குறைந்த வட்டியில் கடன் வழங்கப்படும். இத்திட்டத்தில் பயன்பெற www.petrolpump dealerchayan.in என்ற இணையதளத்தில் 18 வயது  முதல் 60 வயது வரை உள்ள ஆண்-பெண் அனைவரும்  27.9.2023-க்குள் விண்ணப்பிக்கலாம்.  பெட்ரோலியம் நிறுவனத்தின் மூலம் தேர்ந்தெடுக்கப் படும் தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்களுக்கு, அவர்கள்  முதல் முறையாக கொள்முதல் செய்யும் பெட்ரோல்/டீசல்  (ஒரு டேங்கர்) தொகை, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடி யின இனத்தைச் சேர்ந்தவர்களுக்கு குறைந்த வட்டியில்  தாட்கோ மூலமாக கடனாக வழங்கப்படும். பாரத் பெட்ரோலியம் லிமிடெட் மூலமாக தேர்ந்தெடுக் கப்படும் தகுதிவாய்ந்த விண்ணப்பதாரர்கள் தாட்கோ தலைமை அலுவலக மாநில திட்ட மேலாளர் (திட்டங்கள்) கைப்பேசி 7358489990 என்ற எண்ணில் தொடர்பு கொள்ள லாம் என மாவட்ட ஆட்சியர் டாக்டர் த.பிரபுசங்கர் தெரி வித்துள்ளார்.

பொறியாளர் தின விழா 

தஞ்சாவூர், செப்.15 -  தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி சட்டமன்ற உறுப்பி னர் அலுவலகம் அருகே, பேராவூரணி கட்டுமானப் பொறி யாளர்கள் சங்கம் சார்பில் பொறியாளர் தின விழா நடை பெற்றது. பேராவூரணி கட்டுமான பொறியாளர் சங்க  தலைவர் எஸ்.கலைச்செல்வம் தலைமை வகித்தார்.  பேராவூரணி சட்டப்பேரவை உறுப்பினர் நா.அசோக்குமார் பொறியாளர் சங்கக் கொடி ஏற்றி வைத்து வாழ்த்திப் பேசினார். மண்டலத் தலைவர் ஜி.கலியமூர்த்தி, மண்டலச் செயலாளர் பி.சூரிய பிரகாஷ் ஆகியோர் பொது மக்களுக்கு மரக்கன்றுகளை வழங்கினர். 

நகராட்சி கூட்டம்
 

திருத்துறைப்பூண்டி, செப்.15 - திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் நகராட்சி வார்டு சபை கூட்டம் சிங்களாந்தி உதவி பெறும்  தொடக்கப் பள்ளியில் நடைபெற்றது கூட்டத்திற்கு நகர் மன்ற துணைத் தலைவர் எம்.ஜெயபிரகாஷ் தலைமை  வகித்தார். இளநிலை உதவியாளர் எம்.ஆனந்தி, தூய்மைப் பணியாளரின் பரப்புரையாளர் ரேணுகா  மற்றும் ஊர் பொதுமக்கள் பல்வேறு கோரிக்கைகள் குறித்து விவாதித்து, பின்னர் தீர்மானம் நிறைவேற்றப் பட்டது.

சிறப்பு கால்நடை மருத்துவ முகாம் 
தஞ்சாவூர், செப்.15 -  தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி அருகே உள்ள பூவாணம் கிராமம், அய்யனார் கோவில் திடலில்  கலைஞர்  மு.கருணாநிதி நூற்றாண்டை முன்னிட்டு, தஞ்சாவூர் கால்நடை பராமரிப்பு துறை, தஞ்சாவூர் மாவட்ட கூட்டுறவு  பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியம், (தஞ்சாவூர் பால்வளத்துறை) மற்றும் தமிழ்நாடு கால்நடை மருத்துவ  அறிவியல் பல்கலைக்கழகம் இணைந்து, கால்நடை மருத்துவ முகாம் மற்றும் பால் உற்பத்தி கருத்தரங்கை நடத்தினர்.  பட்டுக்கோட்டை கால்நடை பராமரிப்பு துறை உதவி  இயக்குனர் மருத்துவர் கா.புருஷோத்தமன் வரவேற்றார்.  முகாமைத் துவக்கி வைத்து பேராவூரணி சட்டப்பேரவை  உறுப்பினர் நா.அசோக்குமார் பேசினார். தொடர்ந்து சிறந்த, கிடேரிக் கன்றுகள், கால்நடைகளை பராமரிக்கும் உரிமையாளர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. தஞ்சா வூர் மண்டல கால்நடை பராமரிப்புத் துறை இணை இயக் குநர் க.தமிழ்ச்செல்வம், ஆவின் பொது மேலாளர் எஸ். சத்யா ஆகியோர் திட்ட விளக்கவுரையாற்றினர்.  மேலும், கால்நடைகளுக்கு சிகிச்சை அளிக்கப் பட்டன. பின்னர் நடைபெற்ற கருத்தரங்கில் தமிழ்நாடு மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகப் பேராசிரியர் ஜெக தீசன் உரையாற்றினார்.

தமிழ்ச் செம்மல் விருது பெற விண்ணப்பிக்கலாம்

அரியலூர், செப். 15-  அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த தமிழ் ஆர்வலர்கள் தமிழ் விருது பெற விண்ணப்பிக்கலாம் என ஆட்சியர் ஜா.ஆனிமேரி ஸ்வர்ணா தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் தமிழ்த் தொண்டாற்றி வரும் தமிழ் ஆர்வலர்களுக்கு ஊக்கமளிக்கும் வகையில் தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் கடந்த 2015 ஆம் ஆண்டில் முதல் தமிழ்ச் செம்மல் விருது வழங்கப்பட்டு வருகிறது. இவ்விருதுக்கு தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களில் உள்ள தமிழ் ஆர்வலர்களை தெரிவு செய்து, மாவட்டத்திற்கு ஒருவர் என்ற முறையில் “தமிழ்ச் செம்மல்” விருதும், விருதுத் தொகையாக ரூ.25 ஆயிரம் மற்றும்  தகுதியுரை வழங்கப்படுகிறது. அவ்வகையில், அரியலூர்   மாவட்டத்திலுள்ள தமிழ் ஆர்வலர்களிடமிருந்து 2023ஆம் ஆண்டிற்கான தமிழ்ச் செம்மல் விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இவ்விருதுக்குரிய விண்ணப்பப் படிவத்தை தமிழ் வளர்ச்சித் துறையின் www.tamilvalarchithurai.com என்ற வலைதளத்தில் இலவசமாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். விண்ணப்பத்தை  பூர்த்தி செய்து, தன்விவரக்குறிப்பு, நூல்கள், கட்டுரை வெளியிட்டு இருந்தால் அது தொடர்பான விபரங்கள், தமிழ் சங்கங்கள், தமிழ் அமைப்புகளின் பொறுப்பில் அல்லது உறுப்பினராக இருந்தால் அது தொடர்பான விபரம்,  தமிழ்  அமைப்புகளின் பரிந்துரைக் கடிதம் மற்றும் 2 நிழற்படங்கள், ஆற்றிய தமிழ் பணிக்கான சான்றுகள் ஆகியவற்றை இணைத்து அரியலூர் மாவட்டத் தமிழ் வளர்ச்சி உதவி இயக்குநர் அலுவலகத்துக்கு 10.10.2023 அன்றுக்குள் கிடைக்கப் பெறும் வகையில் அனுப்பி வைக்க வேண்டும். மேலும்  விவரங்களுக்கு தமிழ் வளர்ச்சி உதவி இயக்குநர் அலுவலகம், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம்,  அரியலூர்,  (தொலைபேசி எண்.04329}228188) என்ற முகவரியில் நேரிலோ அல்லது தொலைபேசி வாயிலாகவோ தொடர்பு கொள்ளலாம்.

அங்கன்வாடி மையத்தில் விழுந்த தென்னை மரம்: 6 குழந்தைகள் தப்பினர்

திருவாரூர், செப்.15- திருவாரூர் மடப்புரத்தில் உள்ள அங்கன் வாடி மையத்தின் மீது தென்னை மரம்  ஒன்று விழுந்ததில்.நல்வாய்ப்பாக மையத்தில்  இருந்த ஆறு குழந்தைகள் உயிர் தப்பினர். திருவாரூர் மடப்புரத்தில் இயங்கி வரும் அங்கன்வாடி மையத்தில் குழந்தைகள் படித்து வருகின்றனர். வியாழக்கிழமை மாலை இந்த மையத்திற்கு எதிரே உள்ள  தென்னந்தோப்பில் உள்ள தென்னை மரம் ஒன்று  அடியோடு சாய்ந்தது. இந்த மரம் அந்தப் பகுதியில் சென்ற மின் கம்பி மீது  முதலில் விழுந்தது. பின்னர் அங்கு நிறுத்தி  வைக்கப்பட்டிருந்த கார் ஒன்றின் மீது விழுந்தது. தொடர்ந்து அங்கன்வாடி மையத் தின் முகப்பில் விழுந்ததில் மையத்தின் மேலே போடப்பட்டிருக்கும் தகர சீட் மற்றும்  சிமெண்ட் சீட் ஆகியவை சேதமடைந்தன.  நல்வாய்ப்பாக அந்த மையத்தில் இருந்த  ஆறு குழந்தைகளும் உயிர்த்தப்பினர். இதையடுத்து உடனடியாக மின்வாரியத் திற்கு தெரிவிக்கப்பட்ட தகவலின் பேரில் அந்த பகுதியில் மின்சாரம் நிறுத்தப்பட்டது இந்தச் சம்பவம் குறித்து திருவாரூர் நகர் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

அரசு வேலை வாங்கித் தருவதாக 
பணம் மோசடி: தம்பதி கைது

அரியலூர், செப்.15 - அரியலூர் மாவட்டம், உடையார்பாளை யம் அருகே அரசு வேலைவாங்கித் தருவ தாகக் கூறி ரூ.36.20 லட்சம் பணம் மோசடி செய்து, போலி ஆணை வழங்கிய தம்பதி வியாழக்கிழமை கைது செய்யப்பட்டனர். கடலூர் மாவட்டம், காட்டு மன்னார்கோயில் அருகேயுள்ள கண்டமங்க லம், குமிளங்காட்டு தெருவைச் சேர்ந்தவர் பிரபாகரன் (43). இவரது வீட்டுக்குச் சென்ற  உறவினரான அரியலூர் மாவட்டம் உடை யார்பாளையத்தை அடுத்த விழபள்ளம் கிராமத்தைச் சேர்ந்த பிரகாஷ் (42), இவரது மனைவி மதியழகி (35) ஆகியோர் பணம் கொடுத்தால் தங்களுக்கு பிஎஸ்என்எல் நிறுவனத்தில் வேலை வாங்கித் தருவதாக கூறி, அவரிடம் வங்கிப் பரிவர்த்தனை மூலம் ரூ.4,90,000-மும், ரொக்கமாக ரூ.4 லட்சமும் பெற்றுள்ளனர். மேலும், ஊரில் யாராவது படித்து விட்டு  வேலை இல்லாமல் இருந்தால் அழைத்து வாருங்கள், அவர்களுக்கும் வேலை வாங்கித் தருகிறோம் என அந்த தம்பதி  கூறியுள்ளனர். இதனை நம்பிய பிரபாகரன், தமது ஊரைச் சேர்ந்த பிரேம்குமார், முருகன், ரகு பதி, சண்முகசுந்தரம், கவிமணி, கதிரவன் மற்றும் இருகையூரைச் சேர்ந்த குருதேவன் ஆகியோரை பிரகாஷூக்கு அறிமுகம் செய்து வைத்தார். இவர்களிடம் சிமெண்ட் நிறுவனம், சேலம் ஆவின் நிறுவனம், ஆட்சியர் அலுவலகம் மற்றும் அஞ்சல் துறை  உள்ளிட்ட இடங்களில் வேலை வாங்கித் தருவதாக கூறி ரூ.27,10,000-ஐ பெற்றுக் கொண் டார். இதையடுத்து பிரகாஷ், பிரபாகரனுக் கும், கவிமணிக்கும் அஞ்சல் துறைப் பணிக் கான நியமன ஆணையை வழங்கியுள்ளார். இதனை பெற்றுக் கொண்ட அவர்கள், அஞ்சல் துறையில் விசாரித்த போது, பணி  நியமன ஆணை போலியானது என தெரிய வந்தது. இது தொடர்பாக பிரபாகரன், பிர காஷிடம் கேட்ட போது, ‘இது பற்றி வெளி யில் ஏதாவது புகார் கொடுத்தால் உங்களை  கொலை செய்து விடுவேன்’ என மிரட்டி யுள்ளார். இதையடுத்து பிரபாகரன் கடந்த 29.9.2022 அன்று அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப் பாளரிடம் அளித்த புகாரின் பேரில், மாவட்ட  குற்றப்பிரிவு காவல்துறையினர் வழக்குப் பதிந்து, பிரகாஷ் மற்றும் அவரது மனைவி மதியழகி ஆகியோரை தேடி வந்தனர். இந்நிலையில் காவல்துறையினருக்கு கிடைத்த தகவலின்படி, அரியலூர் மாவட்ட  குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் குணமதி,  உதவி ஆய்வாளர்கள் ரவி, முருகன் உள்ளிட்ட காவல்துறையினர், ஜெயங் கொண்டம் அண்ணா சிலை அருகே நின்று கொண்டிருந்த பிரகாஷையும், அரியலூர் ராஜீவ் நகர் பேருந்து நிறுத்தத்தில் நின்று  கொண்டிருந்த பிரகாஷ் மனைவி மதியழகி யையும் வியாழக்கிழமை கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்து இரண்டு கைப்பேசிகள், 60 கிராம் தங்க நகைகள், ரூ.56,070 ரொக்கம், 3 ஏடிஎம் கார்டுகள் மற்றும்  சில போலி நியமன ஆணை கடிதங்களை பறிமுதல் செய்தனர்.

தஞ்சை தமிழ் பல்கலை.யில்  50 சதவீத தள்ளுபடியில் நூல் விற்பனை

தஞ்சாவூர், செப்.15- தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழக பதிப்புத் துறையில், ஆண்டுதோறும் தமிழ்ப்  பல்கலைக்கழகம் தொடங்கப் பெற்ற நாள் மற்றும் பேரறிஞர் அண்ணா பிறந்த தினமான செப்.15 அன்று பதிப்புத்துறை நூல்களை 50 சதவீத சிறப்புக் கழிவு விலை யில் விற்பனை செய்வது வழக்கமாகும்.  இதையொட்டி நடைபெற்ற புத்தக விற்பனையை பல்கலைக்கழக துணை வேந்தர் வி.திருவள்ளுவன் துவக்கி வைத்தார். மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள  சிவாஜி பல்கலைக்கழக துணைவேந்தர் டி.ட்டி.சிர்க்கி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.  மேலும், பதிவாளர் (பொ) சி.தியாக ராஜன், பல்கலைக்கழக ஆட்சிக்குழு உறுப்பினர் ரெ.நீலகண்டன், பதிப்புத்துறை இயக்குநர் (பொ) கோ.பன்னீர்செல்வம் மற்றும் புலத்தலைவர்கள், கல்வியாளர்கள், அலுவல்நிலைப் பணியாளர்கள் கலந்து கொண்டனர். இந்த ஆண்டும், செப்டம்பர் 15 முதல்  அக்டோபர் 14 வரை சிறப்புக் கழிவு விற்பனை நடைபெறவுள்ளது. இவ்வாய்ப்பினை அனைவரும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இந்நூல்கள் யாவும் பதிப்புத் துறை, தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சா வூர் என்ற முகவரியில் கிடைக்கும் என  பல்கலைக்கழக நிர்வாகம் தெரிவித்துள்ளது.