districts

img

சேதுபாவாசத்திரம் மார்க்சிஸ்ட் கட்சியில் இணைந்த 20 குடும்பங்கள்

தஞ்சாவூர், ஜூன் 2-  தஞ்சாவூர் மாவட்டம் சேதுபாவாசத்திரம் ஒன்றியத்தில் இரண்டு இடங்களில் 20-க்கும் மேற்பட்ட குடும்பங்களைச் சேர்ந்த பொது மக்கள் தங்களை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் இணைத்துக் கொண்டனர்.  சேதுபாவாசத்திரம் ஒன்றியம் குருவிக் கரம்பை, பெரியகத்திக்கோட்டை ஆகிய  இரு இடங்களில் நடைபெற்ற கொடியேற்று  நிகழ்ச்சியில், இருபதுக்கும் மேற்பட்ட குடும்பத் தினர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயற்குழு உறுப்பினர் ஆர்.மனோகரன் தலைமையில் கட்சியில் இணைந் தனர். தொடர்ந்து, மல்லிப்பட்டினம் உள்ளிட்ட பல்வேறு கிளைகளில் கட்சிக் கொடி ஏற்றப்பட்டது.  நிகழ்ச்சியில், சேதுபாவாசத்திரம் ஒன்றி யச் செயலாளர் ஆர்.எஸ்.வேலுச்சாமி, மூத்த  தோழர் வீ.கருப்பையா, கொரட்டூர் நீல கண்டன், பெரியண்ணன், சேகர், சீனிவாசன்,  சுப்பிரமணியன், தர்மலிங்கம், இளங்கோ உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.  குருவிக்கரம்பைக்கு முருகையன், பெரியகத்திக்கோட்டைக்கு வைரக்கண்ணு ஆகியோர் கிளை பொறுப்பாளர்களாக தேர்வு  செய்யப்பட்டனர்.

;