districts

பட்டுக்கோட்டை நீதிமன்ற முன்னாள் ஊழியரின் ரூ.1.15 கோடி சொத்து முடக்கம்

தஞ்சாவூர், ஜன.3 -  பட்டுக்கோட்டை நீதிமன்ற முன்னாள் ஊழியரின் ரூ-1.15 கோடி சொத்துகள் முடக்கப்பட்டுள்ளன. தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக் கோட்டையைச் சேர்ந்தவர் தினக ராஜா (61). பட்டுக்கோட்டையில் உள்ள மூன்றாவது கூடுதல் மாவட்ட  நீதிமன்றத்தில் ஊழியராக பணி புரிந்து வந்தார். இவர் கடந்த 2020 பிப்ரவரி மாதம் பணியிலிருந்து ஓய்வு பெற்றார். இந்நிலையில், 2020 ஆம் ஆண்டு  நீதிமன்ற ஆவணங்களை தணிக்கை  செய்தபோது அலுவலக ஆவணங்க ளின்படி 2018 - 2019 ஆம் ஆண்டில்  (26.12.2018 முதல் 25.10.2019 வரை)  தினகராஜா, மோட்டார் வாகன  விபத்துகளில் பாதிக்கப்பட்டவர் களுக்கு வழங்கப்படும் இழப்பீடு தொகையில் ரூ.1,09,55,123-ஐ கையா டல் செய்திருப்பது தெரிய வந்தது. இதையடுத்து, மூன்றாவது கூடு தல் மாவட்ட நீதிபதியாக இருந்த தங்கவேல் உத்தரவின் பேரில், தஞ்சாவூர் மாவட்ட குற்றப்பிரிவில் நீதிமன்ற ஊழியராக இருந்த சித்ரா அளித்த புகாரின் பேரில், மாவட்ட குற்றப்பிரிவு காவ‌ல்துறை‌யின‌ர் வழக்குப் பதிந்து, 2020 ஆம் ஆண்டு  தினகராஜாவை கைது செய்து சிறை யில் அடைத்தனர்.  இது தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்குகள் நடந்து வந்தன. இவ்வழக்கு கடந்த 2023 ஆம் ஆண்டு  அமலாக்கத் துறைக்கு மாற்றம் செய் யப்பட்டது. அவர்கள் நடத்திய விசார ணையில், நீதிபதி கையொப்பமிட்ட காசோலைகளை, அவர் தனது சொந்த வங்கிக் கணக்குகளில் சட்ட விரோதமாக டெபாசிட் செய்து முறை கேட்டில் ஈடுபட்டதை உறுதி செய்த  னர். மேலும் முறைகேடான பணத்தில்,  தனது மனைவி மணிமொழி பெய ரில் பட்டுக்கோட்டையில் ரூ.44 லட்சத் தில் தரைத்தளத்துடன் கூடிய வீடு வாங்கியதாகவும், அதில் முதல் தளம் கட்ட ரூ.31 லட்சத்தை செல வழித்தும், ரூ.18 லட்சத்துக்கு சொகுசு கார் வாங்கியதாகவும், மகன் பெய ரில் வங்கிக் கணக்கில் இருந்த ரூ.1  லட்சம், வீட்டிலிருந்த ரூ.20.50  லட்சம் ஆகியவை கைப்பற்றப்பட்ட தாக அமலாக்கத் துறையால் ஏற்கெ னவே குற்றம் சாட்டப்பட்டது. இந்நிலையில், பணமோசடி தடுப்புச் சட்டத்தின்கீழ் தினகராஜா மற்றும் அவரது குடும்ப உறுப்பினர் களுக்குச் சொந்தமான ரூ.1.15 கோடி  மதிப்புள்ள அசையும் மற்றும் அசையா சொத்துகளை அமலாக்கத் துறை முடக்கியுள்ளது.