districts

img

தோழர் என்.வரதராஜன் நினைவு தினம் அனுஷ்டிப்பு

திண்டுக்கல், ஏப்.10- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மறைந்த மகத்தான தலைவரும் முன்னாள் மாநிலச் செயலாளருமான தோழர் என்.வரதராஜன் அவர்களின் 12வது நினைவு தினம் புதனன்று (ஏப்.10) அனுஷ்டிக்கப்பட்டது. 

பாளையம் அருகேயுள்ள கம்பிளியம்பட்டியில் அவரது நினைவிடத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கட்சியின் மத்தியக்குழு உறுப்பினர் பெ.சண்முகம், மாநிலச் செயற்குழு உறுப்பினர்கள் கே.பாலபாரதி, மதுக்கூர் இராமலிங்கம், மாவட்டச் செயற்குழு உறுப்பினர் பி.செல்வராஜ், மாவட்டக் குழு உறுப்பினர் வ.கல்யாணசுந்தரம், வனிதா, சிபிஎம் குஜிலியம்பாறை ஒன்றியச் செயலாளர் ஏ.ராஜரத்தினம், ஒன்றியக் குழு உறுப்பினர் எல்.தங்கவேல் உள்ளிட்ட பலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். 

திண்டுக்கல்லில் கட்சியின் மாவட்டக் குழு அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்டச் செயலாளரும், வேட்பாளருமான ஆர்.சச்சிதானந்தம், மாநிலக்குழு உறுப்பினர் ஏ.பாக்கியம், மாவட்டச் செயற்குழு உறுப்பினர் கே.பிரபாகரன், மாவட்டக் குழு உறுப்பினர்கள் அழகு, தீபக்ராஜ், நகரச் செயலாளர் ஏ.அரபுமுகமது, ஒன்றியச் செயலாளர் சரத்குமார் உள்ளிட்ட பலர் செவ்வணக்கம் செலுத்தினர்.